Wednesday 5 September 2012

இயலாமை பென்சனும் விசேஷ குடும்ப பென்சனும்


போர்க்களத்தில் நம் வீர தியாகம்

தெரிந்து கொள்ளுங்கள் என்ற புத்தகத்தில் இருந்து சில துளிகள்

இயலாமை பென்சனும், விசேஷ குடும்ப பென்சனும்.

(Grant of Special Family Pension after the death of Disability Pensioner)
(PCDA Circular No.440 dt.26.8.2010)
(இந்த சுற்றறிக்கையின் தமிழாக்கம்)

ஒரு படை வீரர் பணியின் நிமித்தம் இயலாமை அடையும்போது, மருத்துவ குழுவின் சிபாரிசின் அடிப்படையில் அவருக்கு இயலாமை பென்சன் (Disability Pension/Invalid Pension) வழங்கப்படுகிறது.

இவருடைய வாழ்நாளை நிர்ணயிப்பது, இவருடைய இயலாமை தன்மையை பொறுத்து அமைகிறது.  சில உயிர் கொல்லி நோய்களினால் பாதிக்கப்பட்டு இயலாமை பென்சன் பெற்று வருபவர்கள் நீண்ட நாள் வாழ வாய்ப்பில்லை, என்பது இவரை பரிசோதித்த அந்த மருத்துவ குழுவுக்கு நன்கு தெரியும்.  ஆனால் பாதிக்க பட்டவர்களும், அவருடைய குடும்பத்தினரும் இது பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியம்.

காரணம் எந்த நோயினால் பாதிக்கப்பட்டு இயலாமை பென்சனில் வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதோ அதே நோயினால் அவர் பென்சனில் வந்த ஏழு ஆண்டுகளுக்குள் இறக்க நேர்ந்தால் அவர் மனைவிக்கு விசேஷ குடும்ப பென்சன் (Special Famaily Pension) வாழ் நாள் முழுவதும் கிடைக்க வாய்ப்பு உண்டு.

விசேஷ குடும்ப பென்சன் என்பது சாதராண குடும்ப பென்சனைவிட இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.  ஆறாவது ஊதிய கமிசன் பரிந்துரைப்படி குறைந்தபட்ச விசேஷ குடும்ப பென்சன் (Minimum Special Family Pension) ரூ.7000/- என 01.01.2006 முதல் நிர்ணயிக்க பட்டுள்ளது.

ஒரு படை வீரன் பணியின் நிமித்தம் ஏற்பட்ட இயலாமைக்காக அவருக்கு இயலாமை பென்சனும்,  அந்த இயலாமையால் குறைந்த வயதில் அகால மரண மடைந்தால் அவர் மனைவிக்கு விசேஷ குடும்ப பென்சன் வழங்க வேண்டும் என்பதும் இயற்கை விதிகளோடு இணைந்த நீதி ஆகும். (Natural justice).

ஆனால் இத்தனை தெளிவாக உள்ள இந்த இயற்கை நியதியை நமது நாட்டில் பெறுவது அத்தனை எளிதல்ல என்பதை பாதிக்கப்பட்டவர்கள் முதலில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

மரணம் என்பதை எல்லோரும் ஒரு நாள் சந்தித்தே ஆகவேண்டும்.  அதற்காக யாரும் எதுவும் செய்யாமல் சிவனே என்றிப்பதில்லை. அனால் இதுபோன்ற ஆட்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தனக்குப்பின் தன் மனைவி, மக்கள் பொருளாதார சிக்கல் இல்லாமல் இருப்பதற்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை தன்னை பற்றி நன்கு அறிந்த உற்றார் உறவினர்களிடம் விரிவாக சொல்லவேண்டும்.

மேற்குறித்த அரசாணையின்படி, ஒரு இயலாமை பென்சன் பெறுபவர் பணி விலகி வந்த ஏழு ஆண்டுகளுக்குள் இறந்து விட்டால் அவர் மனைவிக்கு விசேஷ குடும்ப பென்சன் கிடைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்.

1. முதலில் எந்த இயலாமைக்கு, அவருக்கு இயலாமை பென்சன் வழங்க படுகிறதோ, அதே இயலாமை காரணமாகத்தான் அவர் இறந்தார் என்பதை மருத்துவ சான்றிதழ்களுடன் நிரூபிக்க வேண்டும்.

2. மருத்துவரிடம் இருந்து பெறப்பட்ட சான்றிதழில், நோயின் அறிகுறிகள், நோயின் தன்மை, சிகிட்சை அளித்த நாட்கள், இறந்த தேதி ஆகியவை குறிப்பிட பட வேண்டும்.

3. இறப்பிற்கான காரணம் தெளிவாக குறிப்பிட பேண்டும். (Cause of Death) அல்லது பென்சன் விண்ணப்பம் அனுப்புபவர் இரண்டு சாட்சிகளுடன் முழு விபரமும் இணைக்க வேண்டும்.

4. தேவைபட்டால் போஸ்ட்  மார்ட்டம் ரிப்போர்ட், போலீஸ் விசாரணை அறிக்கை அகியவையையும் இணைக்கவேண்டும்.

இறந்த படைவீரருடைய ரெகார்ட் ஆபிசுக்கு அனுப்பப்படும் இந்த விண்ணப்பத்துடன் மற்ற மருத்துவ ஆவணங்களும் சேர்க்கப்பட்டு அந்த விதவைக்கு விசேஷ குடும்ப பென்சன் வழங்க பரிந்துரைக்கப்படும்.

ஒருவேளை நன்கு தெரிந்த, புரிந்த விதிகளின்படி விசேஷ குடும்ப பென்சனுக்கு அனுப்பப்பட்ட ஒரு விண்ணப்பம்  சரியான காரணம் காட்டப்படாமல் நிராகரிக்கபட்டால் சம்பந்தப்பட்டவர்கள்  மனம் தளராமல் நீதிக்காக போராட தயங்க கூடாது.

தற்போது ராணுவ தீர்பாயங்கள் (Armed Forces Tribunal) நாடெங்கிலும் செயல்படுவதால் உங்களுக்கு விரைவில் நீதி கிடைக்கும்.  நீதிக்கவும், நியாயத்திர்காகவும் போராட தயங்க கூடாது.  துன்பத்திலும் ஒரு இன்பம் என்பது போல் (Blessing in disguise) இந்த ராணுவ தீர்ப்பாயங்கள் பல ராணுவ வீரர்களுக்கு ஒரு வரப்ரசாதமாக அமைந்துள்ளது.

ராணுவ தீர்ப்பாயத்தின் சென்னை கிளை முகவரி.
Armed Forces Tribunal, 1A, (Old MH Complex) Rudhra Road,
St.Thomas Mount, Chennai 16. PHONE: 044-2233203

வீரத்துடன் வாழ்வதைவிட விழிப்புடன் வாழ்வதே சிறந்தது”

இதை படிப்பவர்கள் நம் இன மக்களுக்கு
உதவ வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.
செய்வீர்களா ?

அண்டை மாநிலமான கேரளாவிலுள்ள
மேஜர் தனபாலன் என்பவர் பல ஆண்டுகளாக
நீதிக்காக போராடி இன்று பல ஆயிரம் ராணுவ அதிகாரிகளுக்கு பலன் அளிக்கும் வகையில் நல்லதோர்
தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் பெற்று தந்துள்ளார்.
அதுதான் “ரேங்க் பெ பற்றிய வழக்கு”

ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் சங்கத்துக்கு
எமது மனமார்ந்த பாராட்டுக்கள்.
(Congratulations to Retired Defence Officers Association)

ஜெய் ஹிந்த்

No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...