Sunday 25 August 2013

ஒய்வு பெற்ற விமானப்படை வீரர்கள் சங்கம் தமிழ் நாடு கிளை கல்வி உதவி தொகை அறிவிப்பு 2013-14




ஒய்வு பெற்ற விமானப்படை வீரர்கள் சங்கம்
தமிழ் நாடு கிளை
விமானப்படை நிலையம், தாம்பரம்,
சென்னை 46.
தொலைபேசி: 044-22392546, 22396565

கல்வி உதவி தொகை அறிவிப்பு 2013-14

தமிழ் நாட்டிலுள்ள ஒய்வு பெற்ற விமானப்படை வீரர்கள் (உறுப்பினர்கள்) குழந்தைகளுக்கு இவ்வாண்டு கீழ் கண்ட கல்வி
உதவி தொகை வழங்கப்பட உள்ளது.

1. Sqn.Ldr. KV பிள்ளை மற்றும் சரஸ்வதி பிள்ளை கல்வி உதவி தொகை.(Rs.4,500 வீதம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு)

2. HFO ஜாபாலி மற்றும் திருமதி பட்டம்மாள் ஜாபாலி கல்வி உதவி தொகை. (Rs.4500  வீதம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு)

3. திரு ஜார்ஜ் மற்றும் திருமதி ஹெலன் கல்வி உதவி தொகை (Rs.4500 வீதம் இரண்டு குழந்தைகளுக்கு). Gp.Capt. Eslin D’Couto VM தனது பெற்றோரை கௌரவிக்கும் பொருட்டு வழங்குவது.

4.  Air Cmde.K. லக்ஷ்மணன் மற்றும் திருமதி மீனா லோசினி லக்ஷ்மணன் ஆகியோர் வழங்கும் நிதி உதவி. Rs.5000  வீதம் இருவருக்கு.

5. ஜெரல்டின் டிகொட்டா திருமண நிதி உதவி Rs.10,000/-  Gp.Capt.Eslin D’Couto மறைந்த தன் தங்கை நினைவாக வழங்குவது.

மேற்கண்ட நிதி உதவிகள் அனைத்தும் 21.09.2013 அன்று நடைபெறும் சங்கத்தின் ஆண்டுவிழாவில் வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் 07.09.2013 இக்குள் அனுப்ப வேண்டும்.



இவண்
  குருப் கேப்டன் A. சாம்பசிவராவ்
செயலாளர் 
 


Tuesday 6 August 2013

ஆனரரி நாயப் சுபேதார் பென்சன் வழக்குகள்


ஆனரரி  நாயப் சுபேதார் பென்சன் வழக்குகள்
வெற்றி மீது வெற்றி கண்டு வருகின்றன 
என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆனரரி நாயப் சுபெதார்களுக்கு ரெகுலர் நாயப் சுபேதார் பென்சன் வழங்கவேண்டும் என்று ஆறாவது ஊதிய கமிசன் தெளிவாக கூறியிருந்த போதிலும் அரசு இதை அமுல் படுத்த வில்லை.

இது சம்பந்தமான வழக்கு உச்ச நீதி மன்றம் வரை சென்று வெற்றி கண்டது.  இருந்தும் அரசு இன்னும் வழங்கவில்லை.  சில தவறான விளக்கங்களை அரசு வழக்கறிஞர் உச்ச நீதி மன்றத்தில் வழங்கியதால் இந்த தீர்ப்பு இன்னும் அமுல் படுத்த படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த 11.03.2013 அன்று கொச்சி ராணுவ நீதி மன்றம் இந்த உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை (O.A.49 of 2012 of AFT Kochin) மேற்கோள் காட்டி  32  ஆனரரி நாயப் சுபெடார்களுக்கு ரெகுலர் நாயப் சுபேதார் பென்சன் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.  இந்த 32  மனுதாரர்களில் சுமார்  28  பேர் 75 வயதை கடந்தவர்கள்.  கொச்சி AFT  வழங்கிய இந்த தீர்ப்பை இன்றைய தேதியில் அமுல் படுத்தியிருப்பார்கள் என்று தெரிகிறது.  ஜெய்பூர் ராணுவ நீதி மன்றத்திலும் இதே போன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால் தமிழ் நாட்டிலிருந்து எந்த ஒரு ஆனரரி நாயப் சுபேதாரும் சென்னை AFT  இக்கு சென்றதாக தெரியவில்லை.  ஏன் என்றும் தெரிய வில்லை.

ஒரு Y குரூப் ரெகுலர் நாயப் சுபேதார் பென்சன் (24 வருடம்) Rs.9382.00
ஒரு Y குரூப் ஆனரரி நாயப் சுபேதார் பென்சன் (24 வருடம்)  Rs.7601.00


நீதிமன்றம் சென்றால் கூடுதல் பென்சனும் கிடைக்கும் 01.01.2006 முதல் அரியர்ஸ் தொகை சுமார் 3.5  லட்சம் வரை கிடைக்கும். 

எனவே நமது தமிழ் நாட்டிலுள்ள ஆனரரி நாயப் சுபெடார்களே விழித்தெழுங்கள்.  கான்டீன் கோட்டாவை மட்டும் வாங்குவதற்கு இல்லை இந்த பதவி.  

Monday 5 August 2013

பென்சனர்களின் ஜாயின்ட் அக்கௌன்ட் பிரச்சினைகள்.


பென்ஷன் சேமிப்பு கணக்கை ஜாயின்ட் அக்கௌன்ட் ஆக
வைத்துக்கொள்வதில் உருவாகும் புதிய பிரச்சனைகள்.

ஒரு பென்சனர் தற்போதைய மத்திய அரசின் ஆணைகளின் படி 
தன் பென்சன் கணக்கை ஜாயின்ட் அக்கௌன்ட் ஆக
 வெகு எளிதில் மாற்றிக்கொள்ளலாம்.  
ஆனால் பின்னொரு காலத்தில் கணவன், 
மனைவி இருவருக்குள் ஏதேனும்
 பிரச்சனை வந்து இந்த கணக்கை மறுபடி 
தனி கணக்காக மாற்ற வேண்டும் என்று 
கணவன் நினைத்தால், அதற்க்கு 
மனைவியின் கையெழுத்தையும் வங்கி கேட்கும் 
என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
 மனைவி கையொப்பமிட மறுத்தால் 
தனி கணக்காக மாற்ற முடியாது.  
இந்த நிலையில் சில விவரமான மனைவி, 
கணவனுக்கு முன்னதாகவே பென்ஷனை எடுத்துக்கொண்டு 
கணவனை அம்போ என்று விட்டு விடுவதும்
 நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. 
சில வங்கிகள் ஓரளவுதான் இவர்களை 
சமாதானப்படுத்த முடியும்.  
நிரந்தர தீர்வுக்கு என்ன செய்வது 
என்பதுதான் தற்போதைய கேள்வி.

1. நன்கு யோசித்து, மிகவும் அவசியம் 
என்றால் மட்டுமே ஜாயின்ட் 
அக்கௌன்ட் ஆக மாற்ற வேண்டும்.
2. இது போன்ற பிரச்சினைகள் வந்துவிட்டால், 
உடனே வேறு ஒரு வங்கியில் 
சேமிப்பு கணக்கு தொடங்கி, உங்கள் பென்ஷனை
 அந்த வங்கிக்கு மாற்ற சொல்லி 
விண்ணப்பம் கொடுக்க வேண்டும்.  
தேவைபட்டால் உங்கள் ரெகார்ட் 
ஆபிசுக்கும் தெரிவிக்க வேண்டும்.
3. பென்ஷனை எடுத்து செலவு செய்யும் விஷயத்தில், 
அன்பும், பாசமும், கண்டிப்பும், 
சிக்கனமும் மிகவும் அவசியம்.
4. வயதான பென்சனர்கள் அவசர செலவுக்கு 
கொஞ்சம் ரொக்க பணத்தை பத்திரமாக வைத்திருப்பது நல்லது.

எந்த சூழ்நிலையிலும் ஒரு பென்சனர், நாம் தான் குடும்ப தலைவன் என்ற அந்தஸ்தை விட்டுக்கொடுக்கலாகது.  ஒருவேளை அப்படி ஒரு சூழ்நிலை உருவாவது போல் தோன்றினால் அதை முளையிலேயே கிள்ளி விடவேண்டும்.



Friday 2 August 2013

கேள்வி பதில் தொடர்ச்சி ....

ECHS கேள்வி பதில் தொடர்ச்சி ...

6. கேள்வி: ஒரு ECHS  உறுப்பினர் அரசு மருத்துவ மனையில் கட்டணம் செலுத்தி சிகிட்சை  பெற்றால், அந்த கட்டணம் திரும்ப கிடைக்குமா ?

பதில்: அரசு மருத்துவ மனைக்கு பரிந்துரைக்கப்பட்டு சிகிட்சை பெரும் உறுப்பினர்களுக்கு செலவு தொகை அனுமதிக்கப்பட்ட விகிதத்தில் வழங்கப்படும்.

அரசு மருத்துவ மனைகளில் சிகிட்சை பெரும் உறுப்பினர்களுக்கு சிகிட்சை செலவில்  80  சதவீதம் முன் பணமாக பெற வகை செய்யப்பட்டுள்ளது.  ஆனால் மருத்துவ மனையில் இருந்து வெளி வந்த ஒரு மாதத்திற்குள் முன் பணத்தை சரி செய்யவேண்டும்.

(Authy: B/49771/AG/ECHS 23 Aug 2004.)

7. கேள்வி:  ECHS  திட்டத்தில் ஒருவர் எந்த தேதியில் இருந்து உறுப்பினர் என்பதை எவ்வாறு கண்டு கொள்வது?

பதில்:  01.04.2003  க்கு முன்னர் டிஸ் சார்ஜில் வந்தவர்கள் இந்த திட்டத்தில் சேர்வதற்கான விண்ணப்பத்தில் ஸ்டேஷன் HQ/ ரிஜெனல் சென்டர் ஆல் வழங்கப்பட்ட தேதி முதல் உறுப்பினராக கருதப்படுவர்.

01.04.2003 இக்கு பின்னர் வெளி வந்தவர்கள் அவர்கள் பணி விலகி வந்த மறு நாள் முதல் உறுப்பினர்களாக கருதப்படுவர்.

(Authy: B/49701/ PR/AGECHS dt.24/2/2011.)

8. கேள்வி: ECHS உறுப்பினரை சார்ந்த யார் யாருக்கு ECHS  இல் சிகிட்சை பெற உரிமை உண்டு?

சமீபத்தில் CGHS  திட்டத்தில் உள்ளது போல் ECHS இக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மகனுக்கு: சுயமாக சம்பாதிக்கும் வரை அல்லது 25  வயது வரை, இதில் எது
                  முன்னதாக வருகிறதோ அது வரை. நிரந்தரமாக ஊனமுற்ற மகன் வயது வரம்பின்றி
                  உறுப்பினராக இருக்கலாம்.
மகளுக்கு: சுயமாக சம்பாதிக்கும் வரை அல்லது திருமணம் ஆகும் வரை.  வயது நிபந்தனை            
                 இல்லாமல் இதில் எது முன்னதாக வருகிறதோ அது வரை.
தவிர :      விவாக ரத்து பெற்ற மகள், கைவிடப்பட்ட மகள், கணவனிடமிருந்து பிரிந்து வாழும்
                 மகள், விதவை மகள், திருமணம் ஆகாத மகள், விதவையான சகோதரிகளும் உறுப்பினர்
                ஆகலாம்.  மைனர் சகோதரர்களும் மேஜர் ஆகும் வரை உறுப்பினர் ஆகலாம்.

9. கேள்வி: கணவனும் மனைவியும் ராணுவ பென்சனர்களாக இருக்கும் பட்சத்தில் ECHS இல் சேர என்ன நிபந்தனைகள்?

   1. கணவனும் மனைவியும் ராணுவ பென்சனர்களாக இருக்கும் பட்சத்தில் ஏதேனும் ஒருவர் மட்டும் ECHS  கட்டணம் செலுத்தினால் போதும்.
   2. இருவரும் கட்டணம் செலுத்தி தங்களுடைய பெற்றோர்களை இந்த திட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.
   3. ஒருவர் சிவில் பென்சனராக இருந்தால் CGHS இல் இருந்து விலகி ECHS இல் சேர்ந்து கொள்ளலாம்.

(Authy: B/49701/MOD/AG/ECHS dt. 24.2.2006.)

10.கேள்வி: இயலாமை பென்சன் பெரும் ஒரு ரிக்ருட் இன் மனைவி, பெற்றோர் குழந்தைகளுக்கு ECHS சலுகை உண்டா?

பதில்: கிடையாது. ரிக்ருட்டிர்க்கு மட்டுமே ECHS சலுகை உண்டு.  பயிற்சியில் சேரும் முன்னதாக திருமணம் செய்திருந்தால் அவர் மனைவி குழந்தைகளுக்கு சலுகை உண்டு.  ஆனால் பெற்றோருக்கு ECHS இல் சேர அனுமதி இல்லை.

(Authy: B/49708 Rect/AG/ECHS dt. 22.5.2006.)

11. கேள்வி: ECHS திட்டத்தில்  என்னென்ன கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் உள்ளது?

   1. ECHS  பாலி கிளினிக் இல்லாத மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு மெடிக்கல் அலவன்ஸ் வழங்க பரிசீலனையில் உள்ளது.

   2. அவசர நிமித்தம் அங்கீகரிக்க படாத மருத்துவ மனைகளில் சிகிட்சை பெறுபவர்களுக்கு முழு செலவு தொகை வழங்க பரிசீலனையில் உள்ளது.

   3. இரண்டாம் உலக போர் வீரர்களுக்கும் ECHS  திட்டத்தை விரிவு படுத்த பரிசீலனையில் உள்ளது.

பின் குறிப்பு: நம்மில் பெரும்பாலனவர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தையும் /ஆரோக்ய வாழ்வுக்கான காப்பீட்டு திட்டத்தையும் (Medical Insurance and Health Insurance) விரும்புவதாகவும் தற்போதைய ECHS  திட்டம் அவ்வளவு பயனுள்ளதாக இல்லை என்று கூறியுள்ளனர்.   எனினும் ECHS  திட்டத்தை மேம்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருவதாக ECHS  மேலாண்மை இயக்குனர் உயர் திரு. மேஜர் ஜெனரல் J.ஜார்ஜ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

ECHS  மேலாண்மை இயக்குனர் 
மேஜர் ஜெனரல் J. ஜார்ஜ் அவர்கள் 
மிகவும் சிறந்த முறையில் 
சேவை செய்து வருவதாக 
செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. 
அவர்களுக்கு பல்லாயிர கணக்கான 
முன்னாள் இராணுவத்தினர் சார்பில்
 மன மார்ந்த நன்றியையும் பாராட்டுதல்களையும் 
தெரிவித்து கொள்கிறோம்.

ஜெய் ஹிந்த் 


Thursday 1 August 2013

ECHS கேள்வி பதில்


முன்னாள் இராணுவத்தினர் பங்களிப்பு மருத்துவ திட்டம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளும் பதில்களும்.

1. கேள்வி: ஒரு ECHS  உறுப்பினரை சார்ந்தவர் (Dependant) மன நிலை பாதிக்கப்பட்டு, தற்கொலைக்கு முயற்சித்து, அவசர நிமித்தம் (As an emergency case)  ECHS இல் அங்கீகரிக்க படாத மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பெற்றால், எமர்ஜென்சி அட்மிசன் என்ற முறையில் அவர் சிகிச்சைக்கான செலவு வழங்கப்படுமா ?

பதில்: தற்கொலை முயற்சி செய்தவர்களுக்கு சிகிட்சை அளிப்பது அவசர சிகிட்சை பட்டியலில் இல்லை என்ற காரணத்தால் முதலில் மறுக்கப்பட்டது. பின்னர் பாதிக்கபட்டவர் மன நோயாளி என்பதாலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாலும், சிகிட்சைக்குரிய ஒப்பந்தத்தில் உள்ளதாலும் அவசர சிகிச்சையாக ஏற்கப்பட்டு, முழுமையான விளக்கத்துடன் அவசர சிகிட்சைக்கு பரிந்துரை கடிதம் வழங்கலாம் எனவும், அங்கீகரிக்க படாத மருத்துவ மனையில் சிகிட்சை பெற்றாலும், அவசர சிகிட்சைக்குரிய செலவு தொகையை அனுமதிக்கப்பட்ட அளவுக்கு வழங்கலாம் எனவும் விளக்கம் வந்துள்ளது.(தற்கொலைக்கு முயற்சித்து தோற்றவர்களை மருத்துவ மனைகள் பரிவோடு அணுகுவதில்லை என்பது பொதுவான அபிப்பிராயம்.  இது போன்ற மருத்துவ உதவி திட்டங்களும் கைவிடலாகாது என்பது இதை எழுதுபவரின் நோக்கம்.)

(Authy:B/49778/AG/ECHS/Policy  13 Nov 2007.)

2. கேள்வி: தீராத நோய்களினால் (Chronic desease)  அவதிப்படுவர்களுக்கு ஒரே சமயத்தில் 90 நாட்களுக்கு மொத்தமாக மருந்து வழங்க அனுமதி உண்டா ?

பதில்: ஆம். அவருக்கு சிகிட்சை அளிக்கும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஒரு நோயாளிக்கு 90 நாட்களுக்கு மொத்தமாக மருந்து மாத்திரைகள் வழங்கலாம்.

3. கேள்வி: வெளி நாடுகளுக்கு பயணம் செய்யும் ECHS  உறுப்பினர்களுக்கு 90 நாட்களுக்கும் மேலாக மருந்து மாத்திரைகள் வழங்க அனுமதி உண்டா?

பதில்: ஆம்.  சில வெளி நாடுகளில், அந்த நாட்டிலுள்ள மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல், நாமாக எந்த மருந்து மாத்திரைகளும் வாங்கமுடியாது என்ற காரணத்தினால், நீண்ட நாட்கள் வெளி நாடு பயணம் செய்பவர்களுக்கு நமது விசேட மருத்துவ அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் கூடுதல் நாட்களுக்கு மருந்துகள் வழங்கலாம்.

(Authy: B/49762/AG/ECHS 02/06/2011)

4. கேள்வி: ஒரு ECHS  உறுப்பினர் சாதாரணமாக எத்தனை நாட்கள் மருத்துவ மனையில் இருந்து சிகிட்சை பெறலாம்?

பதில்: அதிகபட்சமாக  12 நாட்கள் மட்டுமே ஒரு மருத்துவ மனையில் தங்கி சிகிட்சை பெற அனுமதி அளிக்கபடுகிறது.  அதற்க்கு மேல் தேவை பட்டாள் சிகிட்சை அளிக்கும் மருத்துவ மனைகள் நோயாளியின் நிலை பற்றி தெளிவு படுத்தி உரிய அனுமதி பெறவேண்டும்.

சாதாரணமாக  60 நாட்களுக்கு மேல் மருத்துவ மனையில் தங்கி சிகிட்சை பெற அனுமதி அளிக்க படுவதில்லை. ஒரு நோயாளியை கூடுதல் நாட்களுக்கு தங்க வைத்து சிகிட்சை அளிக்கவேண்டிய பொறுப்பு அந்தந்த மருத்துவ மனையை சார்ந்தது.  உரிய அனுமதி பெற வேண்டியது மருத்துவ மனையின் பொறுப்பு.

5.கேள்வி: ஒரு ECHS  உறுப்பினர் தான் விரும்பும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மனைக்கு செல்லலாமா?

பதில்: ஆம்.  தான் விரும்பும் மருத்துவ மனைக்கு செல்லலாம்.  80  வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சர்வீஸ் மருத்துவ மனையில் சிகிட்சை பெற முன்னுரிமை அளிக்கப்படும்.

                                                                                           கேள்வி பதில் இன்னும் வரும் .........

ECHS TOLL FREE NO.1800-114-115  FROM 0900 HRS. TO 1700 HRS.

MANAGING DIRECTOR, ECHS MAJ.GEN.J.GEORGE, MOBILE: 08527794678

  


எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...