Monday 23 November 2015

ஜீவன் பிரமாண் எளிதாக்கப்பட்டுள்ளது





உயிர் சான்றிதழ் (LIFE CERTIFICATE)
வழங்குவது எளிதாக்கபட்டுள்ளது.

தேவையான ஆவணங்கள்
1.  ஆதார் அடையாள அட்டை.
2.  பென்சன் ஆணை எண்.
3.  வங்கி கணக்கு எண்.
4.  உங்களுடைய கை பேசி.

ஜீவன் பிரமாண் என்னும் இணைய தளத்தில் உங்கள் ஆதார் எண், பென்சன் ஆணை எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து உங்களுடைய கை விரல் ரேகையை பதிவு செய்யும் பட்சத்தில் தங்களுடைய பெயர் பதிவு செய்யப்பட்டு ஒரு அடையாள எண் வழங்கப்படும்.  இந்த பதிவை நீங்கள் நவம்பர் மதத்தில் இணைய தள வசதியும், கை ரேகை பதிவு  செய்யும் வசதியுடைய எந்த ஒரு சேவை மையத்திலும் செய்யலாம்.  இப்படி செய்துவிட்டால் நீங்கள் வங்கிக்கு நேரில் செல்ல வேண்டியதில்லை.  இந்த பதிவு மூலம் அச்சிட்டு பெறப்பட்ட சீட்டை நீங்கள் வங்கியில் கொடுத்தால் போதும்.

எக்ஸ் வெல் அறக்கட்டளை, வங்கிக்கு நேரில் செல்லமுடியாத வயதான, நோய்வாய் பட்ட பென்சனர்களுக்கு அவர்கள் வீட்டிற்கு கணிப்பொறியுடன் சென்று இந்த உயிர் சான்றிதழ் பதிவை செய்து கொடுக்கிறது.

இந்த சேவை தேவைபடுவோர் எங்களை தொடர்பு கொள்ளவும்.

எக்ஸ் அறக்கட்டளை,
15G, மிலிடரி லைன்,
சமாதானபுரம், பாளையம்கோட்டை.
போன்: 0462-2575380, 9894152959, 9786449036

Tuesday 10 November 2015

ஒன் ரேங்க் ஒன் பென்சன் அறிவிப்பு





ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் அறிவிப்பு
 வெளி வந்துள்ளது.
அதன் முக்கிய அம்சங்கள்.

1.      01.01.2013 இல் டிச்சார்ஜில் வருபவர்களுக்கு வழங்கப்படும் பென்சன் அதற்க்கு முன்னதாக வெளி வந்த அனைத்து பென்சனர்களுக்கும் 01.07.2014 முதல் வழங்கப்படும்.
2.      2013 இல் ஒய்வு பெரும் ராணுவ வீரருடைய ரேங்க் மற்றும் சர்விஸ் அடிப்படையில் வழங்கப்படும் பென்சன் மற்றவர்களுக்கு 2013 இல் ஒய்வு பெரும் ஒருவருடைய ரேங்க் மற்றும் சர்விஸ் அடிப்படையில் கிடைக்கும் குறைந்த பென்சன் – கூடுதல் பென்சன் ஆகியவற்றின் சராசரி (Average) அடிப்படையில் பழைய பென்சனர்களுக்கு பென்சன் 01.07.2014  முதல் மாற்றி அமைக்கப்படும்.
(இதன் முழு விபரம் அரசாணைகள் வந்த பின்னர்தான் தெரியும்)
3.      இந்த புதிய முறையில் யாருக்கேனும் பென்சன் குறைவாக வரும் பட்சத்தில் அவர் தற்போது வாங்கும் கூடுதல் பென்சன் பாதுகாக்கப்படும்.
4.      அரியர் தொகையானது நாலு தவணைகளில் அரையாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும்.
5.      ஆனால் அனைத்து வகை குடும்ப பென்சனர்களுக்கும் ஒரே தவணையில் வழங்கப்படும்.
6.      வரும் காலத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ராணுவ பென்சனர்களுடைய பென்சன் மாற்றி அமைக்கப்படும்.  அடுத்த மாற்றம்  2019 இல் வரலாம்.
7.      சுய விருப்பத்தின் அடிப்படையில் ராணுவ பணியிலிருந்து விலகி வருபவர்களுக்கு (under Rule 13(3) 1(i) (b) 13 (3) 1 (iv) or Rule 16B of Army Rule 1954 or equivalent Navy & Air Force) ஒன் ரேங்க் ஒன் பென்சன் பயங்கள் கிடைக்காது.
8.      ஒன் ரேங்க் ஒன் பென்சனை அமுல் படுத்துவதில் உள்ள குறைபாடுகளை ஒரு நீதி மன்ற குழு விசாரித்து ஆறு மாதத்திற்குள் அரசுக்கு அறிக்கை சமர்பிக்கவேண்டும்.
9.      அனைவருக்கும் உரிய புதிய பென்சன் அடங்கிய பட்டியல் விரைவில் தயாரிக்கப்பட்டு வங்கிகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.

 நமது கோரிக்கையை ஏற்றுகொள்ள வில்லை இந்த அரசு.  நாம் 185 நாள் உண்ணாவிரதம் இருந்தும் எந்த பயனும் இல்லை.

புதிய பென்சன் எவ்வாறு நிர்ணயிப்பார்கள் என்று நம்மால் யூகிக்க முடிய வில்லை.  அறிவிப்பு வெளி வந்தும் நமக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...