Sunday 31 January 2016

வருமான வரியும் பென்சனர்களும்


வருமான வரியும் பென்சனர்களும்

பென்சனர்கள் வருமான வரி பற்றி ஓரளவு தெரிந்து கொள்வது நல்லது.  உங்களால் முடிந்தால் வரி கட்டுவதை திட்டமிடுங்கள் அல்லது முழுமையாக வரியை கட்டிவிட்டு வயதான காலத்தில் நிம்மதியாக இருங்கள்.

கட்ட வேண்டிய வரியை திட்டமிடுவதற்கு மூன்று முக்கிய பணிகளை நீங்கள் செய்யவேண்டும்.

1.    ஒரு நிதியாண்டில், அதாவது ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை உங்களுக்கு பென்சன் உட்பட வேறு என்னனென்ன வருமானம் வருகிறது என்பதை கணக்கிடவும்.
2.    இந்த மொத்த தொகையை வைத்துக்கொண்டு, கீழே கொடுத்துள்ள அட்டவணைப்படி நீங்கள் எவ்வளவு வரி கட்ட வேண்டும் என்பதை கணக்கிடுங்கள்.
3.    நீங்கள் எவ்வளவு வரி கட்டவேண்டும் என்பதை கணக்கிட்ட பின், கீழ் கண்ட இரண்டில் ஒன்றை முடிவு செய்யவேண்டும்.
(a)  வரியை முழுமையாக கட்டிவிடுவது ...அல்லது
(b)  திட்டமிட்டு வரியை குறைக்க ஏதாவது செய்யவேண்டும்.
வயது 60 க்கு குறைவாக உள்ளவர்களுக்கு (ஏப்ரல் 1 1955 பின்னர் பிறந்தவர்களுக்கு) மார்ச் 31 முடிய உரிய நிதியாண்டுக்கு வருமான வரி விகிதம் (Assessment year 2015-16)

Net income Range
Income Tax Rates
Surcharge
Plus education Cess
Up to Rs.2,50,000
Nil
Nil
Nil
Rs.2,50,000 to Rs.5,00,000
10% of income above
Rs.2,50,000
Nil
3% of income tax
Rs.5,00,000 to Rs.10,00,000
Rs.25,000+20% of the
Income above Rs.5,00,000
Nil
3% of income tax
Rs.10,00,000 to
1,00,00,000
Rs.1,25,000+30% if
Income above
Rs.10,00,000
Nil
3% of income tax
Above Rs.1,00,00,000
Rs.28,25,000+30% of
Income above 1,00,00,000
10% of income tax
3% of income tax and surcharge.


மூத்த குடிமக்கள் (60 வயதுக்கு மேல் ) அந்த நிதியாண்டுக்குள் இருக்க வேண்டும். 80 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Net income Range
Income Tax Rates
Surcharge
Plus education Cess
Up to Rs.3,00,000
Nil
Nil
Nil
Rs.3,00,000  to Rs.5,00,000
10% of income above
Rs.3,00,000
Nil
3% of income tax
Rs.5,00,000 to Rs.10,00,000
Rs.20,000+20% of the
Income above Rs.5,00,000
Nil
3% of income tax
Rs.10,00,000 to
1,00,00,000
Rs.1,20,000+30% if
Income above
Rs.10,00,000
Nil
3% of income tax
Above Rs.1,00,00,000
Rs.28,20,000+30% of
Income above 1,00,00,000
10% of income tax
3% of income tax and surcharge.
80 வயதுக்கு மேல். (ஏப்ரல் 1 1935 க்கு முன் பிறந்தவர்கள் )

Net income Range
Income Tax Rates
Surcharge
Plus education Cess
up to   Rs.5,00,000
Nil
Nil
Nil
Rs.5,00,001 to Rs.10,00,000
20% of the
Income above Rs.5,00,000
Nil
3% of income tax
Rs.10,00,001 to
1,00,00,000
Rs.1,00,000+30% if
Income above
Rs.10,00,000
Nil
3% of income tax
Above Rs.1,00,00,000
Rs.28,00,000+30% of
Income above 1,00,00,000
10% of income tax
3% of income tax and surcharge.
வயதுக்கு தகுந்த வருமான உச்ச வரம்பை விட அதிகமாக வருமானம் பெறுபவர்கள் கண்டிப்பாக ரிடர்ன் (Return) தாக்கல் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் ரிடர்ன் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31.
தணிக்கை செய்யவேண்டிய வருமான கணக்கு உள்ளவர்கள் செப்டம்பர் 30 வரை ரிடர்ன் தாக்கல் செய்யலாம்.
குறிப்பிட்ட காலத்திற்குப்பின் ரிடர்ன் தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும்.
TDS (Tax Deducted at Source) என்றால் என்ன ?
வருமானம் உருவாகும் இடத்தில் வரி பிடித்தம் செய்வதற்கு பெயர் தான் TDS.
ஒருவர் ரூ.ஒரு லட்சத்தை வங்கியில் வைப்பு நிதியாக வைத்து, அவர் பான் கார்டு (PAN Card ) வங்கிக்கு கொடுத்திருந்து,  ரூ.11,000 வட்டி பெறுவதாக இருந்தால் அதில் வருமான வரி சட்டப்படி அதில் 10% TDS  பிடித்தம் செய்து மீதி ரூ.9,900 மட்டுமே வட்டியாக வழங்கப்படும். ஒருவேளை அவர் பான் கார்டு கொடுக்காமல் இருந்தால் வட்டியில் 20% பிடித்தம் செய்யப்பட்டு ரூ.8,800 மட்டுமே வட்டியாக கிடைக்கும்.

அவருடைய ஆண்டு வருமானம், வயதிற்கேற்ற உச்ச வரம்பிற்குள் (இந்த வட்டியையும் சேர்த்து ) இருந்து பான் கார்டும், படிவம் 15G/15H ம், ஏப்ரல் மாதத்திற்குள் வங்கிக்கு கொடுத்திருந்தால் வட்டியில் எந்த பிடித்தமும் செய்யப்பட மாட்டாது.  60 வயதிற்கு குறைவாக உள்ளவர்கள் படிவம் 15G இம், 60 வயதை கடந்தவர்கள் படிவம் 15H இம் கொடுக்க வேண்டும்.

உங்கள் வைப்பு நிதியில் வங்கிகள் TDS பிடித்திருந்தால் நீங்கள் படிவம் 16 ஐ கண்டிப்பாக வங்கியிடமிருந்து பெறவேண்டும்.  இந்த படிவம் 16 ஐ வைத்து நீங்கள் ரிடர்ன் தாக்கல் செய்து, பின்னர் ஒருவேளை கூடுதலாக வரி பிடித்தம் செய்திருந்தால் அதை நீங்கள் திரும்ப பெறலாம். வரி பிடித்தத்தை குறைக்க நீங்கள் ஏதேனும் மூலதனம் செய்திருந்தால் அதன் முழு விபரத்தையும் முன்னதாக வங்கிக்கு தெரிவிக்க வேண்டும்.
வயதான காலத்தில் வரி விலக்கிற்காக கண்ட கண்ட சேமிப்புகளையும் வைத்துக்கொண்டு சிரமப்படாமல் உரிய வரியை ஒவ்வொரு ஆண்டும் செலுத்திவிட்டு நிம்மதியாக இருப்பதே நல்லது என்பது இதை எழுதுபவரது கருத்து.  அல்லது நல்ல நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கி உரிய வரி விலக்கும் பெறலாம். (நன்கொடை நமக்கு மன நிம்மதி தரும்) ஏனென்றால் பெரும்பாலான குடும்பங்களில் வயதானவர்களுக்கு யாரும் உதவி செய்ய முன் வருவதில்லை. 

வங்கிகளும் TDS பிடித்தம் செய்துவிட்டு, படிவம் 16 ஐ குறித்த நேரத்தில் கொடுப்பதில்லை.  இதனால் ஒரு வயதான வாடிக்கையாளர் பல முறை வங்கிக்கு அலையை வேண்டியதுள்ளது. (இணைய தள சேவை இளைஞர்களுக்கே என்று ஆன பின் வங்கிகளில் முதியவர்களை யாரும் மதிப்பதில்லை).  சேவை மனப்பான்மை உடைய இனைஞர்களை தேர்வு செய்து வங்கிகளில் பணியில் அமர்த்தாமல், பொறியியல் பட்டதாரிகளையும், கணிப்பொறி வல்லுனர்களையும் வங்கியில் சாதாரண பணியில் அமர்த்தியுள்ளதால் சேவையின் தரம் குறைந்து வருகிறது.
நல்ல அரசு பணியிலிருந்து ஒய்வு பெற்ற பல முதியவர்கள், தன்பிள்ளைகள் உடன் இல்லாததால், தனியாக இருந்துகொண்டு சிரமப்படுகின்றனர்.  உதவிக்கு நம்பிக்கையான ஆள் கிடைக்காததால் பயத்துடன் வாழ்கின்றனர்.

அதே நேரத்தில் ஒரு கூலி வேலை பார்க்கும் குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக உணவருந்தி ஒரே அறையில் துயில்கின்றனர்.  பணமும் பாசமும் ஒரு இடத்தில் இருப்பதில்லை.  

பணமே பிரதானம் என்று வாழ்ந்தவர்கள் பலர் அது தவறு என்பதை காலம் கடந்து உணர்ந்துள்ளனர். ரூ.ஒரு கோடி விலையில் மனையும், ஒன்றரை கோடி ரூபாய் செலவில் மாளிகையும் கட்டி ஓகோ என்று வாழ்ந்தவர்கள் ஒரு நாள் இரவு வெள்ளத்தில் அத்தனையையும் இழந்து வீதிக்கு வந்துவிட்ட நிலையை நாம் கண் கூடாக கண்டோம்.  சென்னை வெள்ளம் மக்களுக்கு புகட்டிய பாடம் மறக்க முடியாதது.  ஆம் வெள்ளத்தில் சிக்கியவர்கள் துயர் துடைக்க வந்து குவிந்த நிவாரண பொருட்களே சாட்சி.  ஒரு மாபெரும் வெள்ளத்தால் மனித நேயம் கற்பிக்கப்பட்டுள்ளது என்றால் மிகையாகாது.



No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...