Monday 19 January 2015

ராணுவ தீர்ப்பாயம் (Armed Forces Tribunal)



 
ஒவ்வொரு ராணுவ வீரனும் மறக்க முடியாத தளபதி.
ராணுவ தீர்ப்பாயம் (Armed Forces Tribunal)

மத்திய அரசின் ஒவ்வொரு துறைக்கும் தீர்ப்பாயங்கள் இருந்த போதிலும், ராணுவத்தினருக்கு மட்டும்  கடந்த 62 ஆண்டுகளாக இல்லாமல் இருந்தது.  கடைசியாக 08.08.2009 அன்றுதான் ராணுவத்தினருக்கான தனிப்பட்ட தீர்ப்பாயங்கள் தொடங்கப்பட்டன.

இதுநாள் வரை ராணுவத்தினருக்கும், முன்னாள் ராணுவத்தினருக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நிவாரணம் தேடி, ராணுவ அமைச்சகத்துக்கு எதிராக நாடெங்கிலும் உள்ள 15  தீர்ப்பயங்களில் வழக்குகள் மலைபோல் குவிந்தன.

அடிமைபோல் நடத்தப்பட்ட இந்த ராணுவத்தினர் முதல் முறையாக தனக்கென நியமிக்கப்பட்ட ஒரு நீதி மன்றத்தில் இரண்டு நீதிபதிகள் முன்னிலையில் நீதி கேட்டு முறையிட்டனர்.  பல ஆயிரக்கணக்கான நல்ல தீர்ப்புகளை பெற்றனர்.  ஆனால் முடிவில் நடந்தது என்ன ?

அத்தனை தீர்ப்புக்களையும் அவமதித்த ராணுவ அமைச்சகம் பாதிக்கப்பட்டவர்களை உச்ச நீதிமன்றத்துக்கு இழுத்தது.  நல்ல நிர்வாகம் வேண்டும் என்று கோஷமிடும் இந்த அரசு (Good Governance) ஈவு இரக்கமின்றி ஆயிரகணக்கான போர் காயமுற்ற வீரர்களின் பென்சன் வழக்குகளை மேல் முறையீட்டுக்கு உச்ச நீதி மன்றத்துக்கு அனுப்பியது.  ராணுவ அமைச்சகத்தின் அராஜக போக்கை கண்ட உச்ச நீதிமன்றம் அனைத்து மேல் முறையீடுகளையும் கடந்த 10.12.2014 அன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பீல்ட் மார்ஷால் என்ற புகழ் பெற்ற பதவி வழங்கிய இந்திய அரசு அவருக்கு 30 ஆண்டுகளாக அந்த பதவிக்குரிய சம்பளம் வழங்கவில்லை.  உலகில் பீல்ட் மார்ஷால் பதவி பெற்றவருக்கு ஒய்வு என்பது கிடையாது.  (A Field Marshal never Retires) கடைசியில் நமது ஜனாதிபதி திரு அப்துல் கலாம் அவர்கள் தலையிட்டு அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக ரூ.1.6  கோடி அறியர் தொகைக்கான காசோலையை ஒரு செயாலாளர் அவசர அவசராமக மருத்துமனைக்கு டெல்லியிலிருந்து வெல்லிங்டன் சென்று கொடுத்தார்.  அவர் இறுதி சடங்கில் குறைந்த பட்சம் நமது முப்படை தளபதி கூட கலந்து கொள்ளவில்லை. சினிமா ஷூட்டிங்கில் காயமுற்ற அமிதாப் பச்சனை பார்க்க திருமதி இந்திரா காந்தி மும்பை மருத்துவ மனைக்கு சென்றார்.  கோடீஸ்வரர் அம்பானி அடக்கத்துக்கு திரு அத்வானி சென்றார்.  இந்திய அரசு மநேக்ஷாவுக்கு இந்த பதவி கொடுத்திருக்கவும் வேண்டாம் இப்படி அவமதிதிருக்கவும் வேண்டாம்.

“இருபதாம் நூற்றாண்டில்  பங்களா தேஷ் “ என்ற ஒரு புது நாட்டையே உருவாக்கியே ஒரு ராணுவ தளபதிக்கே இந்த நாட்டில் இந்த கதி என்றால் சாதாரண படை வீரனை யார் கண்டு கொள்வார்கள்.

“நாட்டை காத்த வீரர்களை நினைக்காத நாடு இனி யாரும் அதற்காக உயிர் விடும் தகுதியை இழந்து விடும் “ என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

“ வரும் காலங்களில் நாட்டை காக்க வேண்டும் என்ற புனிதமான எண்ணத்துடன் ராணுவத்துக்கு வருபவர்களைவிட ஏதேனும் ஒரு வேலை கிடைத்தால் போதும் என்று வருபவர்கள் அதிகமாகி நமது நாட்டின் பாதுகாப்பு ஒரு கேள்வி குறியாகிவிடும் என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.  நல்ல சம்பளத்தில் சிறு சிறு வேலைகளுக்கு ஆள் கிடைக்காத இந்த காலகட்டத்தில், ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் மட்டும் ஏன் இத்தனை கூட்டம் என்றுதான் எமக்கு புரியவில்லை. 

No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...