Tuesday 10 November 2015

ஒன் ரேங்க் ஒன் பென்சன் அறிவிப்பு





ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் அறிவிப்பு
 வெளி வந்துள்ளது.
அதன் முக்கிய அம்சங்கள்.

1.      01.01.2013 இல் டிச்சார்ஜில் வருபவர்களுக்கு வழங்கப்படும் பென்சன் அதற்க்கு முன்னதாக வெளி வந்த அனைத்து பென்சனர்களுக்கும் 01.07.2014 முதல் வழங்கப்படும்.
2.      2013 இல் ஒய்வு பெரும் ராணுவ வீரருடைய ரேங்க் மற்றும் சர்விஸ் அடிப்படையில் வழங்கப்படும் பென்சன் மற்றவர்களுக்கு 2013 இல் ஒய்வு பெரும் ஒருவருடைய ரேங்க் மற்றும் சர்விஸ் அடிப்படையில் கிடைக்கும் குறைந்த பென்சன் – கூடுதல் பென்சன் ஆகியவற்றின் சராசரி (Average) அடிப்படையில் பழைய பென்சனர்களுக்கு பென்சன் 01.07.2014  முதல் மாற்றி அமைக்கப்படும்.
(இதன் முழு விபரம் அரசாணைகள் வந்த பின்னர்தான் தெரியும்)
3.      இந்த புதிய முறையில் யாருக்கேனும் பென்சன் குறைவாக வரும் பட்சத்தில் அவர் தற்போது வாங்கும் கூடுதல் பென்சன் பாதுகாக்கப்படும்.
4.      அரியர் தொகையானது நாலு தவணைகளில் அரையாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும்.
5.      ஆனால் அனைத்து வகை குடும்ப பென்சனர்களுக்கும் ஒரே தவணையில் வழங்கப்படும்.
6.      வரும் காலத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ராணுவ பென்சனர்களுடைய பென்சன் மாற்றி அமைக்கப்படும்.  அடுத்த மாற்றம்  2019 இல் வரலாம்.
7.      சுய விருப்பத்தின் அடிப்படையில் ராணுவ பணியிலிருந்து விலகி வருபவர்களுக்கு (under Rule 13(3) 1(i) (b) 13 (3) 1 (iv) or Rule 16B of Army Rule 1954 or equivalent Navy & Air Force) ஒன் ரேங்க் ஒன் பென்சன் பயங்கள் கிடைக்காது.
8.      ஒன் ரேங்க் ஒன் பென்சனை அமுல் படுத்துவதில் உள்ள குறைபாடுகளை ஒரு நீதி மன்ற குழு விசாரித்து ஆறு மாதத்திற்குள் அரசுக்கு அறிக்கை சமர்பிக்கவேண்டும்.
9.      அனைவருக்கும் உரிய புதிய பென்சன் அடங்கிய பட்டியல் விரைவில் தயாரிக்கப்பட்டு வங்கிகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.

 நமது கோரிக்கையை ஏற்றுகொள்ள வில்லை இந்த அரசு.  நாம் 185 நாள் உண்ணாவிரதம் இருந்தும் எந்த பயனும் இல்லை.

புதிய பென்சன் எவ்வாறு நிர்ணயிப்பார்கள் என்று நம்மால் யூகிக்க முடிய வில்லை.  அறிவிப்பு வெளி வந்தும் நமக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...