Thursday, 20 December 2012

பெரும் ஏமாற்றம் எங்களுக்கு


எங்களுக்கு பெரும் ஏமாற்றம்.

நீங்கள் ஆவலுடன் எதிர் நோக்கும் பென்சன் ஆணைகள்

நீங்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் பென்சன் ஆணைகள் ஜனவரி 2013 ல்
வெளிவரும் என்று பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கீழ் கண்டபடி தான் கூடுதல் இருக்கும் என ஒரு தொலைகாட்சி தெரிவித்துள்ளது.

சிப்பாய் : ரூபாய்.377
நாயக் : ரூபாய்.412
ஹவில்டர் : ரூபாய்.461
கேப்டன்: ரூபாய்.1500
மேஜர்: ரூபாய்.4105
லெப்.கர்னல்.ரூபாய்.565
கர்னல்: ரூபாய்.1745
பிரிகேடியர்:ரூபாய்.2995
மேஜர் ஜென.ரூபாய்.3650

மற்ற ரேங்கில் உள்ளவர்களுக்கு எந்த மாற்றமும் இருப்பதாக தெரியவில்லை.
இதுதான் இராணுவ அமைச்சகத்தில் சிபாரிசு என்று கூறப்படுகிறது.

சாதாரண படை வீரர்களுக்கு ஒரு பெரும் ஏமாற்றம்.
அரசு பெரிய அளவில் செய்திகளை வெளியிட்டுவிட்டு
இந்த குறைந்த அளவு கொடுப்பது சரியில்லை.
தொலைகாட்சி நிகழ்ச்சியை காண
-ak-antony-pension/1/238078.html.

Sunday, 16 December 2012

இராணுவ பென்சன் வழிகாட்டி புத்தகம்.


இதோ வந்துவிட்டது !
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 
இராணுவ பென்சன் வழிகாட்டிபுத்தகம்.

23.12.2012 அன்று நெல்லையில்  வெளியிடபடுகிறது.
  
“இராணுவ பென்சனர்களுக்கு
ஓர் வழிகாட்டி
(A Guide to Defence Pensioners in Tamil)

வெளியிடுவோர்
எக்ஸ் வெல் அறக்கட்டளை
15G மிலிடரி லைன்,
சமாதானபுரம், பாளையம்கோட்டை,
திருநெல்வேலி 627002.
போன்: ௦04622575380
9786449036, 9894152959,
9442801632, 9894125019

இராணுவ பென்சனர்களுக்கு ஓர் அருமையான புத்தகம்.
ஒவ்வொரு இராணுவ பென்சனரும் அவசியம்
படித்து பயன் பெறவேண்டியது.

தேவைபடுவோர் தொடர்பு கொள்ளவும்.

Monday, 10 December 2012

திருமண நிகழ்ச்சியும், தஞ்சாவூர் முன்னாள் விமானப்படை வீரர்கள் சங்க கூட்டமும்.





திருமண நிகழ்ச்சியும், தஞ்சாவூர் முன்னாள் விமானப்படை வீரர்கள் சங்க கூட்டமும்.

எனது ஆருயிர் நண்பர் திரு நா.இராசமோகன் (இந்திய விமான படை ஓய்வு) அவர்களின் மகன் செல்வன் Er.R.சுந்தர் (எ) செல்வ நாயகத்துக்கும்
Dr.E.ஜெயப்ரியவுக்கும்
12.12.12 புதன்கிழமை காலை 9 மணிக்கு
முத்துபேட்டை
சிதம்பர ராமஜெயம் திருமண அரங்கில் வைத்து
திருமணம் நடைபெற உள்ளது.
நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு
மணமக்களை வாழ்த்திட நண்பர் சார்பாக வேண்டுகிறேன்.

பின் குறிப்பு

திருமணத்தில் கலந்துகொள்ளும் முன்னாள் விமானப்படை நண்பர்களின் வசதிக்காக தஞ்சாவூர் முன்னாள் விமானப்படை வீரர்களின் சங்கத்தின்
 காலாண்டு கூட்டம்
முத்துபேட்டை கொய்யா கல்யாண மண்டபத்தில் வைத்து அன்றைய தினம் காலை 11 மணிக்கு நடைபெறும் என சங்க தலைவர் தெரிவிக்கிறார்.

நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் சிறப்பிக்க அனபுடன் கேட்டுகொள்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு

திரு நா.இராசமோகன் போன்:9442232221
திரு ஷண்முகம், செயலாளர்:9500355847

Tuesday, 20 November 2012

ஒன் ரேங்க் ஒன் பென்சன்



ஒன் ரேங்க் ஒன் பென்சன் என்ன ஆனது?

சமீபத்தில் அரசு அறிவித்த 2300  கோடி கூடுதல் பென்சன் பலன்கள் என்ன ஆனது என்று அனைவரும் கேட்ட வண்ணம் உள்ளனர்.

இது சம்பந்தமாக நமது சங்க தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் ராஜ் காடியன்  அவர்கள் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்து கேட்டபோது ,  பென்சன்  பணிகள்  வேகமாக நடந்து வருவதாகவும் நவம்பர் மாத இறுதியில் அரசு ஆணைகள் வெளிவரும் என கூறியுள்ளார்.

குடும்ப பென்சனிலும் முன்னேற்றம் இருக்கும். சிப்பாய் மனைவிகளுடைய குடும்ப பென்சனில் உள்ள குறைகளை சரிசெய்ய அனைத்து முயற்சிகளும் நடந்துவருவதாக கூறினார்.

Saturday, 20 October 2012

ரிசர்விஸ்ட் பென்சன்


சந்தோஷத்தில் மூழ்கிய பென்சனர்


ஒரு விமான படை வீரருக்கு 48 ஆண்டுகளுக்கு பின்
பென்சன் கிடைத்தது என்பது செய்தி.

சாதாரணமாக பாதுகாப்பு படையில் வீரர்களை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு தொடர்ந்து பணியில் வைத்துக்கொண்டு அதன்பின்னர் ரிசர்விஸ்ட் பென்சன் கொடுப்பது வழக்கம்.  இந்த நடைமுறை தற்போது இல்லை.

இது போன்ற நிபந்தனைகளுடன் பணி விலகி வந்த பலர் இந்திய ராணுவத்தில் பென்சன் பெற்று வருகின்றனர்.

ஆனால் விமானபடையில் இதே போன்ற நிபந்தனையுடன் பணி புரிந்து வெளி வந்தவர்களுக்கு ரிசர்விஸ்ட் பென்சன் கொடுப்பதாக தெரியவில்லை. “உங்கள் சேவை தேவை இல்லை (Your services are no longer required”) என்ற குறிப்புடன் ஒன்பது ஆண்டுகளுக்குப்பின் வெளியே அனுப்பிவிட்டு ஆறு ஆண்டுகள் ரிசர்வ் என்று சரியானபடி குறிப்பிடாமல் பல விமான படை வீரர்களுக்கு பென்சன் வழங்க படவில்லை.  இது ஏன் என்று தெரியவில்லை. யாரும் கண்டு கொள்ளவும் இல்லை.

ஆனால் சமீபத்தில் இது சம்பந்தமாக AFT Principal Bench, New Delhi யில் நடந்த (TA 564 of 2010) ஒரு வழக்கில் 75 வயதான பலருக்கு பென்சன் வழங்க தீர்ப்பு வழங்கப்பட்டது.

சமீபத்தில் ஒரு Ex 201674 CPL Rishi Kumar  என்பவர் 08.05.1948 முதல் 08.05.1957 வரை ஒன்பது ஆண்டுகள் பணி புரிந்து அதன் பின்னர் 15.02.1963 இல் ரிசர்வ் நிபந்தனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.  இவர் கடந்த 30.04.2011 அன்று 48 ஆண்டுகளுக்கு பின் விண்ணப்பம் செய்து பென்சனும் 48 ஆண்டுகளுக்கான நிலுவை தொகையும் பெற்றுள்ளதாக செய்தி வந்துள்ளது.

எனவே இதே நிபந்தனைகளுடன் விமான படையில் இருந்து வெளிவந்து பென்சன் பெறாமல் இருந்தால் உடனே Pension and Welfare Wing, AFRO, Subroto Park, New Delhi 110010 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் எழுபது வயதை கடந்து இருப்பார்கள்.  எனவே இவர்களுக்கு உதவ குடும்பத்தில் உள்ளவர்களும், நல சங்கங்களும் முன் வர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

Exsm. Help Line Centre :       044-25675236
Sgt.S.Kandiah (Retd.)             9786449036
Sgt.Shanmugam (Retd.)          9500355847

(Source : “From the Tarmac” Air Force Journal)

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...