Tuesday, 6 August 2013

ஆனரரி நாயப் சுபேதார் பென்சன் வழக்குகள்


ஆனரரி  நாயப் சுபேதார் பென்சன் வழக்குகள்
வெற்றி மீது வெற்றி கண்டு வருகின்றன 
என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆனரரி நாயப் சுபெதார்களுக்கு ரெகுலர் நாயப் சுபேதார் பென்சன் வழங்கவேண்டும் என்று ஆறாவது ஊதிய கமிசன் தெளிவாக கூறியிருந்த போதிலும் அரசு இதை அமுல் படுத்த வில்லை.

இது சம்பந்தமான வழக்கு உச்ச நீதி மன்றம் வரை சென்று வெற்றி கண்டது.  இருந்தும் அரசு இன்னும் வழங்கவில்லை.  சில தவறான விளக்கங்களை அரசு வழக்கறிஞர் உச்ச நீதி மன்றத்தில் வழங்கியதால் இந்த தீர்ப்பு இன்னும் அமுல் படுத்த படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த 11.03.2013 அன்று கொச்சி ராணுவ நீதி மன்றம் இந்த உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை (O.A.49 of 2012 of AFT Kochin) மேற்கோள் காட்டி  32  ஆனரரி நாயப் சுபெடார்களுக்கு ரெகுலர் நாயப் சுபேதார் பென்சன் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.  இந்த 32  மனுதாரர்களில் சுமார்  28  பேர் 75 வயதை கடந்தவர்கள்.  கொச்சி AFT  வழங்கிய இந்த தீர்ப்பை இன்றைய தேதியில் அமுல் படுத்தியிருப்பார்கள் என்று தெரிகிறது.  ஜெய்பூர் ராணுவ நீதி மன்றத்திலும் இதே போன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால் தமிழ் நாட்டிலிருந்து எந்த ஒரு ஆனரரி நாயப் சுபேதாரும் சென்னை AFT  இக்கு சென்றதாக தெரியவில்லை.  ஏன் என்றும் தெரிய வில்லை.

ஒரு Y குரூப் ரெகுலர் நாயப் சுபேதார் பென்சன் (24 வருடம்) Rs.9382.00
ஒரு Y குரூப் ஆனரரி நாயப் சுபேதார் பென்சன் (24 வருடம்)  Rs.7601.00


நீதிமன்றம் சென்றால் கூடுதல் பென்சனும் கிடைக்கும் 01.01.2006 முதல் அரியர்ஸ் தொகை சுமார் 3.5  லட்சம் வரை கிடைக்கும். 

எனவே நமது தமிழ் நாட்டிலுள்ள ஆனரரி நாயப் சுபெடார்களே விழித்தெழுங்கள்.  கான்டீன் கோட்டாவை மட்டும் வாங்குவதற்கு இல்லை இந்த பதவி.  

Monday, 5 August 2013

பென்சனர்களின் ஜாயின்ட் அக்கௌன்ட் பிரச்சினைகள்.


பென்ஷன் சேமிப்பு கணக்கை ஜாயின்ட் அக்கௌன்ட் ஆக
வைத்துக்கொள்வதில் உருவாகும் புதிய பிரச்சனைகள்.

ஒரு பென்சனர் தற்போதைய மத்திய அரசின் ஆணைகளின் படி 
தன் பென்சன் கணக்கை ஜாயின்ட் அக்கௌன்ட் ஆக
 வெகு எளிதில் மாற்றிக்கொள்ளலாம்.  
ஆனால் பின்னொரு காலத்தில் கணவன், 
மனைவி இருவருக்குள் ஏதேனும்
 பிரச்சனை வந்து இந்த கணக்கை மறுபடி 
தனி கணக்காக மாற்ற வேண்டும் என்று 
கணவன் நினைத்தால், அதற்க்கு 
மனைவியின் கையெழுத்தையும் வங்கி கேட்கும் 
என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
 மனைவி கையொப்பமிட மறுத்தால் 
தனி கணக்காக மாற்ற முடியாது.  
இந்த நிலையில் சில விவரமான மனைவி, 
கணவனுக்கு முன்னதாகவே பென்ஷனை எடுத்துக்கொண்டு 
கணவனை அம்போ என்று விட்டு விடுவதும்
 நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. 
சில வங்கிகள் ஓரளவுதான் இவர்களை 
சமாதானப்படுத்த முடியும்.  
நிரந்தர தீர்வுக்கு என்ன செய்வது 
என்பதுதான் தற்போதைய கேள்வி.

1. நன்கு யோசித்து, மிகவும் அவசியம் 
என்றால் மட்டுமே ஜாயின்ட் 
அக்கௌன்ட் ஆக மாற்ற வேண்டும்.
2. இது போன்ற பிரச்சினைகள் வந்துவிட்டால், 
உடனே வேறு ஒரு வங்கியில் 
சேமிப்பு கணக்கு தொடங்கி, உங்கள் பென்ஷனை
 அந்த வங்கிக்கு மாற்ற சொல்லி 
விண்ணப்பம் கொடுக்க வேண்டும்.  
தேவைபட்டால் உங்கள் ரெகார்ட் 
ஆபிசுக்கும் தெரிவிக்க வேண்டும்.
3. பென்ஷனை எடுத்து செலவு செய்யும் விஷயத்தில், 
அன்பும், பாசமும், கண்டிப்பும், 
சிக்கனமும் மிகவும் அவசியம்.
4. வயதான பென்சனர்கள் அவசர செலவுக்கு 
கொஞ்சம் ரொக்க பணத்தை பத்திரமாக வைத்திருப்பது நல்லது.

எந்த சூழ்நிலையிலும் ஒரு பென்சனர், நாம் தான் குடும்ப தலைவன் என்ற அந்தஸ்தை விட்டுக்கொடுக்கலாகது.  ஒருவேளை அப்படி ஒரு சூழ்நிலை உருவாவது போல் தோன்றினால் அதை முளையிலேயே கிள்ளி விடவேண்டும்.



Friday, 2 August 2013

கேள்வி பதில் தொடர்ச்சி ....

ECHS கேள்வி பதில் தொடர்ச்சி ...

6. கேள்வி: ஒரு ECHS  உறுப்பினர் அரசு மருத்துவ மனையில் கட்டணம் செலுத்தி சிகிட்சை  பெற்றால், அந்த கட்டணம் திரும்ப கிடைக்குமா ?

பதில்: அரசு மருத்துவ மனைக்கு பரிந்துரைக்கப்பட்டு சிகிட்சை பெரும் உறுப்பினர்களுக்கு செலவு தொகை அனுமதிக்கப்பட்ட விகிதத்தில் வழங்கப்படும்.

அரசு மருத்துவ மனைகளில் சிகிட்சை பெரும் உறுப்பினர்களுக்கு சிகிட்சை செலவில்  80  சதவீதம் முன் பணமாக பெற வகை செய்யப்பட்டுள்ளது.  ஆனால் மருத்துவ மனையில் இருந்து வெளி வந்த ஒரு மாதத்திற்குள் முன் பணத்தை சரி செய்யவேண்டும்.

(Authy: B/49771/AG/ECHS 23 Aug 2004.)

7. கேள்வி:  ECHS  திட்டத்தில் ஒருவர் எந்த தேதியில் இருந்து உறுப்பினர் என்பதை எவ்வாறு கண்டு கொள்வது?

பதில்:  01.04.2003  க்கு முன்னர் டிஸ் சார்ஜில் வந்தவர்கள் இந்த திட்டத்தில் சேர்வதற்கான விண்ணப்பத்தில் ஸ்டேஷன் HQ/ ரிஜெனல் சென்டர் ஆல் வழங்கப்பட்ட தேதி முதல் உறுப்பினராக கருதப்படுவர்.

01.04.2003 இக்கு பின்னர் வெளி வந்தவர்கள் அவர்கள் பணி விலகி வந்த மறு நாள் முதல் உறுப்பினர்களாக கருதப்படுவர்.

(Authy: B/49701/ PR/AGECHS dt.24/2/2011.)

8. கேள்வி: ECHS உறுப்பினரை சார்ந்த யார் யாருக்கு ECHS  இல் சிகிட்சை பெற உரிமை உண்டு?

சமீபத்தில் CGHS  திட்டத்தில் உள்ளது போல் ECHS இக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மகனுக்கு: சுயமாக சம்பாதிக்கும் வரை அல்லது 25  வயது வரை, இதில் எது
                  முன்னதாக வருகிறதோ அது வரை. நிரந்தரமாக ஊனமுற்ற மகன் வயது வரம்பின்றி
                  உறுப்பினராக இருக்கலாம்.
மகளுக்கு: சுயமாக சம்பாதிக்கும் வரை அல்லது திருமணம் ஆகும் வரை.  வயது நிபந்தனை            
                 இல்லாமல் இதில் எது முன்னதாக வருகிறதோ அது வரை.
தவிர :      விவாக ரத்து பெற்ற மகள், கைவிடப்பட்ட மகள், கணவனிடமிருந்து பிரிந்து வாழும்
                 மகள், விதவை மகள், திருமணம் ஆகாத மகள், விதவையான சகோதரிகளும் உறுப்பினர்
                ஆகலாம்.  மைனர் சகோதரர்களும் மேஜர் ஆகும் வரை உறுப்பினர் ஆகலாம்.

9. கேள்வி: கணவனும் மனைவியும் ராணுவ பென்சனர்களாக இருக்கும் பட்சத்தில் ECHS இல் சேர என்ன நிபந்தனைகள்?

   1. கணவனும் மனைவியும் ராணுவ பென்சனர்களாக இருக்கும் பட்சத்தில் ஏதேனும் ஒருவர் மட்டும் ECHS  கட்டணம் செலுத்தினால் போதும்.
   2. இருவரும் கட்டணம் செலுத்தி தங்களுடைய பெற்றோர்களை இந்த திட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.
   3. ஒருவர் சிவில் பென்சனராக இருந்தால் CGHS இல் இருந்து விலகி ECHS இல் சேர்ந்து கொள்ளலாம்.

(Authy: B/49701/MOD/AG/ECHS dt. 24.2.2006.)

10.கேள்வி: இயலாமை பென்சன் பெரும் ஒரு ரிக்ருட் இன் மனைவி, பெற்றோர் குழந்தைகளுக்கு ECHS சலுகை உண்டா?

பதில்: கிடையாது. ரிக்ருட்டிர்க்கு மட்டுமே ECHS சலுகை உண்டு.  பயிற்சியில் சேரும் முன்னதாக திருமணம் செய்திருந்தால் அவர் மனைவி குழந்தைகளுக்கு சலுகை உண்டு.  ஆனால் பெற்றோருக்கு ECHS இல் சேர அனுமதி இல்லை.

(Authy: B/49708 Rect/AG/ECHS dt. 22.5.2006.)

11. கேள்வி: ECHS திட்டத்தில்  என்னென்ன கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் உள்ளது?

   1. ECHS  பாலி கிளினிக் இல்லாத மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு மெடிக்கல் அலவன்ஸ் வழங்க பரிசீலனையில் உள்ளது.

   2. அவசர நிமித்தம் அங்கீகரிக்க படாத மருத்துவ மனைகளில் சிகிட்சை பெறுபவர்களுக்கு முழு செலவு தொகை வழங்க பரிசீலனையில் உள்ளது.

   3. இரண்டாம் உலக போர் வீரர்களுக்கும் ECHS  திட்டத்தை விரிவு படுத்த பரிசீலனையில் உள்ளது.

பின் குறிப்பு: நம்மில் பெரும்பாலனவர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தையும் /ஆரோக்ய வாழ்வுக்கான காப்பீட்டு திட்டத்தையும் (Medical Insurance and Health Insurance) விரும்புவதாகவும் தற்போதைய ECHS  திட்டம் அவ்வளவு பயனுள்ளதாக இல்லை என்று கூறியுள்ளனர்.   எனினும் ECHS  திட்டத்தை மேம்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருவதாக ECHS  மேலாண்மை இயக்குனர் உயர் திரு. மேஜர் ஜெனரல் J.ஜார்ஜ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

ECHS  மேலாண்மை இயக்குனர் 
மேஜர் ஜெனரல் J. ஜார்ஜ் அவர்கள் 
மிகவும் சிறந்த முறையில் 
சேவை செய்து வருவதாக 
செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. 
அவர்களுக்கு பல்லாயிர கணக்கான 
முன்னாள் இராணுவத்தினர் சார்பில்
 மன மார்ந்த நன்றியையும் பாராட்டுதல்களையும் 
தெரிவித்து கொள்கிறோம்.

ஜெய் ஹிந்த் 


Thursday, 1 August 2013

ECHS கேள்வி பதில்


முன்னாள் இராணுவத்தினர் பங்களிப்பு மருத்துவ திட்டம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளும் பதில்களும்.

1. கேள்வி: ஒரு ECHS  உறுப்பினரை சார்ந்தவர் (Dependant) மன நிலை பாதிக்கப்பட்டு, தற்கொலைக்கு முயற்சித்து, அவசர நிமித்தம் (As an emergency case)  ECHS இல் அங்கீகரிக்க படாத மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பெற்றால், எமர்ஜென்சி அட்மிசன் என்ற முறையில் அவர் சிகிச்சைக்கான செலவு வழங்கப்படுமா ?

பதில்: தற்கொலை முயற்சி செய்தவர்களுக்கு சிகிட்சை அளிப்பது அவசர சிகிட்சை பட்டியலில் இல்லை என்ற காரணத்தால் முதலில் மறுக்கப்பட்டது. பின்னர் பாதிக்கபட்டவர் மன நோயாளி என்பதாலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாலும், சிகிட்சைக்குரிய ஒப்பந்தத்தில் உள்ளதாலும் அவசர சிகிச்சையாக ஏற்கப்பட்டு, முழுமையான விளக்கத்துடன் அவசர சிகிட்சைக்கு பரிந்துரை கடிதம் வழங்கலாம் எனவும், அங்கீகரிக்க படாத மருத்துவ மனையில் சிகிட்சை பெற்றாலும், அவசர சிகிட்சைக்குரிய செலவு தொகையை அனுமதிக்கப்பட்ட அளவுக்கு வழங்கலாம் எனவும் விளக்கம் வந்துள்ளது.(தற்கொலைக்கு முயற்சித்து தோற்றவர்களை மருத்துவ மனைகள் பரிவோடு அணுகுவதில்லை என்பது பொதுவான அபிப்பிராயம்.  இது போன்ற மருத்துவ உதவி திட்டங்களும் கைவிடலாகாது என்பது இதை எழுதுபவரின் நோக்கம்.)

(Authy:B/49778/AG/ECHS/Policy  13 Nov 2007.)

2. கேள்வி: தீராத நோய்களினால் (Chronic desease)  அவதிப்படுவர்களுக்கு ஒரே சமயத்தில் 90 நாட்களுக்கு மொத்தமாக மருந்து வழங்க அனுமதி உண்டா ?

பதில்: ஆம். அவருக்கு சிகிட்சை அளிக்கும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஒரு நோயாளிக்கு 90 நாட்களுக்கு மொத்தமாக மருந்து மாத்திரைகள் வழங்கலாம்.

3. கேள்வி: வெளி நாடுகளுக்கு பயணம் செய்யும் ECHS  உறுப்பினர்களுக்கு 90 நாட்களுக்கும் மேலாக மருந்து மாத்திரைகள் வழங்க அனுமதி உண்டா?

பதில்: ஆம்.  சில வெளி நாடுகளில், அந்த நாட்டிலுள்ள மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல், நாமாக எந்த மருந்து மாத்திரைகளும் வாங்கமுடியாது என்ற காரணத்தினால், நீண்ட நாட்கள் வெளி நாடு பயணம் செய்பவர்களுக்கு நமது விசேட மருத்துவ அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் கூடுதல் நாட்களுக்கு மருந்துகள் வழங்கலாம்.

(Authy: B/49762/AG/ECHS 02/06/2011)

4. கேள்வி: ஒரு ECHS  உறுப்பினர் சாதாரணமாக எத்தனை நாட்கள் மருத்துவ மனையில் இருந்து சிகிட்சை பெறலாம்?

பதில்: அதிகபட்சமாக  12 நாட்கள் மட்டுமே ஒரு மருத்துவ மனையில் தங்கி சிகிட்சை பெற அனுமதி அளிக்கபடுகிறது.  அதற்க்கு மேல் தேவை பட்டாள் சிகிட்சை அளிக்கும் மருத்துவ மனைகள் நோயாளியின் நிலை பற்றி தெளிவு படுத்தி உரிய அனுமதி பெறவேண்டும்.

சாதாரணமாக  60 நாட்களுக்கு மேல் மருத்துவ மனையில் தங்கி சிகிட்சை பெற அனுமதி அளிக்க படுவதில்லை. ஒரு நோயாளியை கூடுதல் நாட்களுக்கு தங்க வைத்து சிகிட்சை அளிக்கவேண்டிய பொறுப்பு அந்தந்த மருத்துவ மனையை சார்ந்தது.  உரிய அனுமதி பெற வேண்டியது மருத்துவ மனையின் பொறுப்பு.

5.கேள்வி: ஒரு ECHS  உறுப்பினர் தான் விரும்பும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மனைக்கு செல்லலாமா?

பதில்: ஆம்.  தான் விரும்பும் மருத்துவ மனைக்கு செல்லலாம்.  80  வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சர்வீஸ் மருத்துவ மனையில் சிகிட்சை பெற முன்னுரிமை அளிக்கப்படும்.

                                                                                           கேள்வி பதில் இன்னும் வரும் .........

ECHS TOLL FREE NO.1800-114-115  FROM 0900 HRS. TO 1700 HRS.

MANAGING DIRECTOR, ECHS MAJ.GEN.J.GEORGE, MOBILE: 08527794678

  


Tuesday, 30 July 2013

பென்சன் அரியர் இன்னும் வழங்கவில்லை


 
பென்சனர் குறை தீர்க்கும் கூட்டம்.
மேம்படுத்த பட்ட பென்சன் விகிதங்களை
இன்னும் வங்கிகள் வழங்க வில்லை.

இராணுவ பென்சனர் அனைவருக்கும் 24.09.2012 முதல் பென்சன் மாற்றி அமைக்க பட வேண்டும் என்று கடந்த 17.01.2013 அன்றே அரசாணைகள் வெளியிடப்பட்டன.  தற்போது ஒன்பது மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது, இன்னும் பெரும்பாலான இராணுவ பென்சனர்களுக்கும், குடும்ப பென்சனர்களுக்கும் இந்த பென்சன் மாற்றி அமைக்க பட வில்லை.

அனைத்து வங்கிகளும் பென்சன் கணக்கிடும் பணிகளை தனது தலைமை அலுவலகத்துக்கு கொண்டுசென்று விட்டதால், பென்சனர் குறைகளை அருகிலுள்ள கிளைகள் கண்டுகொள்வதில்லை.  பெரும்பாலான பென்சனர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் சிவனே என்று இருந்து விடுகின்றனர்.  வங்கிகளும் கண்டு கொள்ளாமல் அப்படியே பென்ஷனை மாற்றி அமைக்கமால் விட்டு விடுகின்றன.

தமிழ் நாட்டில் குறிப்பாக இந்தியன் வங்கியும், இந்தியன் ஓவர் சீஸ் வங்கியும் இந்த பென்சன் மாற்றி அமைக்கும் பணியை ஆர்வமுடன் செய்வதாக தெரிய வில்லை.  புகார்களை கண்டு கொள்வதே இல்லை.  தாமதமாக வழங்கப்படும் பென்சனுக்கும், நிலுவை தொகைக்கும் வங்கிகள் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று பாரத ரிசர்வ் வங்கி கடிதங்கள் அனுப்பியும், பாங்கிங் ஆம்புட்ஸ்மன் என்ற ஒரு குறை தீர்க்கும் அமைப்பு இருந்தும், இந்த பென்சன் வழங்கும் வங்கிகள் கண்டு கொள்வதே இல்லை. இது போன்ற நிர்வாக குறைபாடுகள் வங்கிகளின் பெருமையை சீர் குலைக்கும் என்பதை மறக்கலாகாது.

பெரும்பாலான குடும்ப பென்சனர்கள் வயதானவர்கள்.  அவர்கள் உயிருடன் இருக்குபோது கொடுக்கப்படாத இந்த கூடுதல் பென்சன் அவர்கள் இறந்த பின் அப்படியே மறைந்து போகிறது. 
   
இராணுவ குடும்ப பென்சனர்களுக்கு தன் கணவரின் பதவி, பணிக்காலம், பணி பிரிவு போன்ற முக்கிய தகவல்கள் எதுவும் தெரிவதில்லை. ஆனால் காண்டீனில் தன் கணவருக்கு கொடுக்கப்படும் கோட்டாவை மட்டும் நன்கு தெரிந்து கொள்கின்றனர் என்பதுதான் கொடுமை. இந்த கட்டுரையாளர் கடந்த இருபத்தைந்து ஆண்டு அனுபவத்தில் இதை எழுதுகிறார் என்பதை இதை படிப்பவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

இந்த அரசாணைகளின்படி ஒரு ஆனரரி கேப்டன் மனைவிக்கு இன்றைய தேதியில் Rs.25,008  கூடுதல் பென்சன் நிலுவை தொகையாக (Pension arrears) வழங்க பட்டிருக்க வேண்டும்.  அதே போல் ஒரு ஆனரரி லெப்டினென்ட் மனைவிக்கு Rs.21,412 நிலுவை தொகையாக வளங்கபட்டிருக்க வேண்டும்.  ஆனால் இன்னும் வழங்கப்பட வில்லை.   இந்த சூழ்நிலையில் இந்த வங்கிகள் நியாயமான முறையில் நஷ்ட ஈடாவது வழங்க வேண்டும்.  நஷ்ட ஈடு முறையே Rs.1,047 மற்றும் Rs.885 வழங்க வேண்டும்.  ஆனால் இந்த வங்கிகள் கண்டு கொள்வதே இல்லை.

இதற்க்கு என்னதான் தீர்வு ?  உண்மையில் வங்கிகள் பென்சனர்களின் ஒற்றுமையை பரிசோதித்து பார்க்கின்றன.  பல்லாயிர கணக்கான இராணுவ பென்சனர்கள் அமைதியாக இருப்பதாலும், பென்சன் பற்றி விஷயங்களை தெரியாமல் இருப்பதினாலும்,  பென்சனர் சங்கங்களும் ஆர்வமுடன் செயல் படாத காரணத்தினால் இதுபோன்ற அநீதிகள் நடக்கிறது.  ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்து அந்தந்த வங்கிகள் முன் போராடினால்தான் நீதி கிடைக்கும்.  செய்தால் பலன் கிடைக்கும்.  இல்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது.   இது போன்ற நிலை தொடரும்.  ஒரு சமுதாயம் வளர விழிப்புணர்வு வேண்டும்.

Monday, 29 July 2013

குடும்ப பென்சனர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியது.



இராணுவ குடும்ப பென்சனர்கள் அவசியம்
தெரிந்து கொள்ள வேண்டியது

பெரும்பாலான இராணுவ பென்சனர்கள், சிப்பாய், நாயக், ஹவில்தார் ஆகிய பதவியிலிருந்து பணி விலகி வந்தவர்களாக இருக்கிறார்கள்.  இவர்களது குடும்ப பென்சன் சில தவறான கணக்கீடுகளால் வெறும் Rs.3,500/-  என நிர்ணயிக்க பட்டது.

இந்த தவறான கணக்கீடு 01.01.2006  முதல் 23.09.2012  வரை அமுலில் இருந்தது.   அதாவது 24  ஆண்டு பணிபுரிந்த ஒரு சிப்பாய் மனைவிக்கும் ஒரு ஹவில்தார் மனைவிக்கும் வெறும் Rs.3,500/-  தான் வழங்கப்பட்டது.  இதை சரி செய்ய பல கோரிக்கைகளை அரசிடம் சமர்பித்து, கடைசியில் 24.09.2012  முதல் மட்டுமே கூடுதல் பென்சன் வழங்க ஆணைகள் பிறப்பித்தது.

இந்த அரசாணையின் படி அனைத்து குடும்ப பென்சனர்களுக்கும் 24.09.2012 முதல் பென்சன் மாற்றி அமைக்க படவேண்டும். ஒரு குடும்ப பென்சனருக்கு இப்போதைய சரியான பென்சன் வழங்க கீழ் கண்ட முக்கிய காரணிகள் வங்கிகளுக்கு அவசியம் தேவை.

குடும்ப பென்சனரின் கணவரின் பதவி (Rank)
பணி புரிந்த காலம். (Qualifying Service)
பணி பிரிவு (குரூப்) (Group)

மேற்கண்ட இந்த காரணிகள் அடிப்பைடையில் CDA (P)  தெளிவான பென்சன் பட்டியல்கள் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளன.

இதன்படி 24 ஆண்டு சர்வீஸ் முடித்த ஒரு   Y  குரூப் ஹவில்தார் மனைவிக்கு வெறும் Rs.3500  ஆக இருந்த பென்சன் 24.09.2012  முதல் Rs.4425/_  ஆக உயரும்.  ஜூலை மாதம் வரை பென்சன் அரியர்  Rs.16,799/-  வரை கிடைக்கும்.  இது வரை பென்சன் மாற்றி அமைக்க படாதவர்கள், தங்கள் கணவரின் பதவி, சர்வீஸ் மற்றும் குரூப் இவற்றை உடனே தனது வங்கிக்கு தெரியபடுத்தவும்.

எக்ஸ் வெல் அறக்கட்டளை தனது பென்சன் வழிகாட்டி புத்தகத்துடன் இந்த பென்சன் பட்டியல்களை அச்சிட்டு இலவசமாக வழங்குகிறது.  ஒவ்வொரு பென்சனரும் அவசியம் வைத்துகொள்ளவேண்டிய புத்தகம் இது.  மேலும் உதவிக்கு எக்ஸ் வெல் அறக்கட்டளையை அணுகவும்.

Sunday, 28 July 2013

முன்னாள் இராணுவத்தினர் பங்களிப்பு மருத்துவ திட்டம்




முன்னாள் இராணுவத்தினர் பங்களிப்பு மருத்துவ திட்டம் (ECHS)

தீராத நோய்களினால் அவதிப்படும் உறுப்பினர்கள் அடிக்கடி நமது கிளினிக்குக்கு வந்து பின்னர் மருத்துவ மனைக்கு செல்வதில் பல சிரமம் இருப்பதால் மருத்துவ மனைக்கு செல்லும் அனுமதி கடிதங்களை (Referral letters) ஆறு மாத காலம் வரை வைத்திருந்து நேரடியாக மருத்துவ மனைக்கு சென்று சேர்ந்து சிகிச்சை பெற இந்த திட்டத்தில் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வசதி,  நீரழிவு நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகள், இதய நோயாளிகள், டயாலிசிஸ் செய்து வரும் நோயாளிகள் மற்றும் கேன்சர் நோயாளிகள் இவர்களுக்கு பொருந்தும்.

மேற்கண்ட நோய்களுக்கு சிகிட்சை பெற்று வரும் ECHS  உறுப்பினர்கள் தங்கள் கிளினிக்கில் இருந்து ஆறு மாத காலம் செல்லத்தக்க அனுமதி கடிதங்களை (Referral letters with a validity of 6 months) பெற்று கொள்ளலாம்.  அவசர காலங்களில் நேரடியாக மருத்துவ மனைகளுக்கு சென்று பயன்பெறலாம். இந்த கடிதம் அவசர காலங்களில் மிகவும் உபயோகமாக இருக்கும்.

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...