Tuesday 6 August 2013

ஆனரரி நாயப் சுபேதார் பென்சன் வழக்குகள்


ஆனரரி  நாயப் சுபேதார் பென்சன் வழக்குகள்
வெற்றி மீது வெற்றி கண்டு வருகின்றன 
என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆனரரி நாயப் சுபெதார்களுக்கு ரெகுலர் நாயப் சுபேதார் பென்சன் வழங்கவேண்டும் என்று ஆறாவது ஊதிய கமிசன் தெளிவாக கூறியிருந்த போதிலும் அரசு இதை அமுல் படுத்த வில்லை.

இது சம்பந்தமான வழக்கு உச்ச நீதி மன்றம் வரை சென்று வெற்றி கண்டது.  இருந்தும் அரசு இன்னும் வழங்கவில்லை.  சில தவறான விளக்கங்களை அரசு வழக்கறிஞர் உச்ச நீதி மன்றத்தில் வழங்கியதால் இந்த தீர்ப்பு இன்னும் அமுல் படுத்த படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த 11.03.2013 அன்று கொச்சி ராணுவ நீதி மன்றம் இந்த உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை (O.A.49 of 2012 of AFT Kochin) மேற்கோள் காட்டி  32  ஆனரரி நாயப் சுபெடார்களுக்கு ரெகுலர் நாயப் சுபேதார் பென்சன் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.  இந்த 32  மனுதாரர்களில் சுமார்  28  பேர் 75 வயதை கடந்தவர்கள்.  கொச்சி AFT  வழங்கிய இந்த தீர்ப்பை இன்றைய தேதியில் அமுல் படுத்தியிருப்பார்கள் என்று தெரிகிறது.  ஜெய்பூர் ராணுவ நீதி மன்றத்திலும் இதே போன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால் தமிழ் நாட்டிலிருந்து எந்த ஒரு ஆனரரி நாயப் சுபேதாரும் சென்னை AFT  இக்கு சென்றதாக தெரியவில்லை.  ஏன் என்றும் தெரிய வில்லை.

ஒரு Y குரூப் ரெகுலர் நாயப் சுபேதார் பென்சன் (24 வருடம்) Rs.9382.00
ஒரு Y குரூப் ஆனரரி நாயப் சுபேதார் பென்சன் (24 வருடம்)  Rs.7601.00


நீதிமன்றம் சென்றால் கூடுதல் பென்சனும் கிடைக்கும் 01.01.2006 முதல் அரியர்ஸ் தொகை சுமார் 3.5  லட்சம் வரை கிடைக்கும். 

எனவே நமது தமிழ் நாட்டிலுள்ள ஆனரரி நாயப் சுபெடார்களே விழித்தெழுங்கள்.  கான்டீன் கோட்டாவை மட்டும் வாங்குவதற்கு இல்லை இந்த பதவி.  

No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...