Friday, 15 January 2016

அரியர் தொகை குறைவாக கிடைப்பதேன் ?




முன்னாள் படை வீரர்களுக்கு மிகக்குறைவான ஓய்வூதிய நிலுவைத்தொகை கிடைப்பதன் காரணமென்ன?
   -லெப்டினன் கர்னல். பழனி சாமி (ஓய்வு)
            [ இது Brig C S Vidyasagar ஆங்கிலத்தில் Why Are You Getting So Low Pension Arrears?என்ற தலைப்பில்  ‘https://thetsewablog.wordpress.com ‘ என்றவலைப்பதிவில்  12 -11- 2015 வெளியிட்ட  கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது ]
                                                            
 அன்புள்ள JCOs, NCOs, OR மற்றும் குடும்ப ஓய்வூதியம் (பென்ஷன்) பெற்று வரும் நண்பர்களே,
கடந்த ஜனவரி 2006 லிருந்து  30 ஜூன் 2012 வரைக்கும் ஆன காலகட்டத்தில் ஏன் உங்களுக்கு மிகவும் குறைந்த அளவு ஓய்வூதிய நிலுவைத்தொகையே கிடைக்கவுள்ளது என்பதை கட்டாயம் நீங்கள்  அறிய வேண்டும்.
பாதுகாப்பு அமைச்சகம் ஜனவரி 2006 தேதிப்படிக்கான பென்சனை எப்படி கணக்க்கிட்டிருக்கிறது  என்பதை விவரித்து, பின்னர் ஏன் மிகக்குறைந்த ஓய்வூதிய உயர்வையே PCDA (P) அலஹாபாத் அண்மையில் வெளியிட்டுள்ள சர்குலர் 547 அளிக்கவிருக்கிறது என்பதை விளக்குகிறேன்.
பாதுகாப்பு அமைச்சகத்தைப் பொருத்தவரை ஜனவரி  2006 தேதிப்படிக்கான ஓய்வூதிய நிலுவைத்தொகை என்பது சர்குலர் எண்களின்  (Circulars 547 & 379) வித்தியாசமே ஒழிய வேறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை! 
 ஜனவரி 2006 க்கு முன்பு ஒரு ‘ Y ’ குரூப்பைச் சார்ந்த சிப்பாய் 15 ஆண்டு பணிகாலத்துகுப் பின்பு மாதம் ரூ  4,300.௦௦ அடிப்படை சம்பளமாகப் பெற்று வந்தார். ஐந்தாவது சம்பளக் கமிசனில் ரூ 32500 -700- 4300.௦௦ என்ற சம்பள அளவுப்படி இந்த ரூ 4,300 ஒரு ‘ Y ’ குரூப்பைச் சார்ந்த சிப்பாயின் உச்சநிலை சம்பளம் ஆகும். அதே ‘ Y’ குரூப் சிப்பாயின்  சம்பளம்  ஜனவரி 2006ல் ஆறாவது சம்பளக் கமிசனின் சம்பளவிகிதப்படி மாதம் ரூ 12,000. (Pay Band ரூ 8000 + Grade Pay ரூ 2000 + MSP ரூ 2000 ஆக மொத்தம் ரூ 12,000). அதாவது , ஜனவரி 2006ல் இவர் ஓய்வு பெறும்போது ஓய்வூதியமாக மாதம் ரூ 6,000/- பெறுவார் (கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் பாதி அளவு).
உச்ச நீதிமன்றம் மேஜர் ஜெனெரல்  எஸ் பி எஸ் வைய்ன்ஸ் Vs UOI - 2008 என்ற வழக்கில் 2006 ஆண்டுக்குப் பின் ஓய்வு பெற்ற பென்சனர்களுக்கு கொடுக்கப்பட்டு வரும்  பயன்கள் ( benefits ) அனைத்தையும் 2006 ஆண்டுக்கு முன்னர் ஒய்வு பெற்ற பென்சனர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பின்படி’ Y’ குரூப் சிப்பாய்க்கு 15 ஆண்டு கால சேவைக்குப் பின் மாதம் ரூ 6,000/- பென்சன் கிடைக்க வேண்டும் என்பது நன்கு தெளிவாகிறது. ஆனால் இந்திய அரசு இதே சேவைக் கால சிப்பாய்க்கு சர்குலர் 547 ன்படி என்ன கொடுத்த்திருக்கிறது?
PCDA (Pension) அலஹாபாத் பென்சன் கணக்கீட்டு அதிகாரிகள் 15 வருடம் சேவை முடித்த ஒரு ‘Y’ குரூப் சிப்பாயை ஒரு வருட சேவை கூட முடிக்காத சிப்பாய்க்கு சமமாகக் கருதி  சம்பளப்ப் பட்டியலைத் தயாரித்திருக்கிறார்கள். அவரின் 2006 க்கு முந்தய அடிப்படை சம்பளமான ரூ 3,250 க்கு இணையாக, உத்தேச சம்பளத்தை ரூ 10,250 என்று கணக்கிட்டு இருக்கிறார்கள். இது ஜனவரி 2006 ல் சிப்பாயின் 15 வருட பணிக்காலத்தை பூஜ்ய கால சேவைக்கு சமமாகக் கருதி கணக்கிட்டதற்கு ஒப்பாகும். அது மட்டுமல்லாமல் இப்பட்டியல் Special Army Instructions (SAI) - 1/S/2008 இன் படிதான் தயாரிக்கப் பட்டிருக்கிறது என்றும் வாதிடுகிறார்கள்.
இந்த ஓய்வூதியமும்  33 வருடம் சேவைக் காலம் முடித்திருந்தால்தான் முழுமையாகக் கொடுக்கப்படும். சேவைக்காலம் அதற்கு குறைவாக இருந்தால் அதே விகிதத்தில் ஓய்வூதியமும் குறைத்து வழங்கப்படும். ஒரு சிப்பாயின் பணிக்காலம் 15 வரு டத்தில் (17 வருடமாக இப்போது உயர்த்தப்பட்டுள்ளது) முடிந்து விடுகிறது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும்கூட! இவ்விதம், 15 வருட காலம் பணிமுடித்த ‘ Y’ க்ரூப் சிப்பாயின் மாத ஓய்வூதியம் ரூ 3,883 {= 5120 x (15 +10)/33} ஆக அமைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் சிப்பாய், நாயக், ஹவில்தார் ஆகியவர்களின் ஓய்வூதியம் இவ்வளவு குறைவாக இருப்பதன் அடிப்படைக் காரணம்.  இதை விட அர்த்தமற்ற சம்பள விகித அமைப்பு இருக்க முடியுமா?
Pay Band – 1 ல் சம்பள விகிதம் ரூ 5200 - 22000 த்துடன் Grade Pay ரூ 2000 மும் ராணுவ சேவை படி(MSP) ரூ 2000௦௦௦ மும் சேர்த்து அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிப்பாயின் 15 வருட சேவைகாலத்தைக் கருத்தில் கொண்டு அதற்குரிய உத்தேச அடிப்படைச் சம்பளமாக  ரூ 5200+ 3 % என்ற அடிப்படையில் வருடாந்திர உயர்வை கணக்கிட்டிருந்தால் அது S A I - 1/S/2008 இல்  கொடுத்துள்ளபடி ரூ 12,000/- ஆக இருந்திருக்கும்.
1 5  வருடம் சேவை முடித்த ‘ Y ’ குரூப்பைச் சார்ந்த சிப்பாய்களின் பென்சன் அவர்கள்  2006 க்கு முன்னரோ அல்லது பின்னரோ எப்போது ஓய்வு பெற்றிருப்பினும் மாதம் ரூ 6,000/- ஆக அமைக்கப்படிருக்க வேண்டும். ஆனால் அவ்விதம்  அமைக்கப்படவில்லை.
ஒரு நல்ல செய்தி என்னவென்றால் 1973 லிருந்து சிபாய் – ஹவில்தார் களுக்கு நஷ்டம் விளைத்த இந்த ‘ 33 வருட பணி’ என்ற விதி 2006 க்கு முதலில் ஒய்வு பெற்றவர்களுக்கும்   சேர்ந்து இப்போது ஒழிந்தது !
திரு எம். ஓ. இனாசு என்ற முன்னாள் படை வீரர் பணி ஓய்வு பெற்றபின் கேரளாவில் உதவி அலுவலக மேற்ப்பார்வையாளர் என்ற  மத்திய அரசின் பணியில் சேர்ந்தார். அதிலிருந்தும் ஓய்வு பெற்றபின்  அவர் 2006ஆம் வருடத்துக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கான  இந்த ‘33 வருட பணி ’ என்ற விதியை எதிர்த்து எர்ணாக்குளம் C A T (Central Administrative Tribunal)   இல் வழக்குத் தொடர்ந்தார். CAT எர்ணாக்குளம் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து  விட்டபோதிலும் மனம் தளராது  கேரளா உயர் நீதிமன்றத்துக்குச் சென்றார். கேரளா உயர் நீதிமன்றம் CAT எர்ணாக்குளத்தின் தீர்ப்பு செல்லத் தக்கதல்ல என்று முடிவு செய்ததன் பேரில், CAT எர்ணாக்குளம் 2006 க்குப் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கியதைப் போலவே 2006 க்கு முன்னர் ஓய்வுபெற்றவர்களுக்கும் (எஸ் பி எஸ் வைன்ஸ் Vs UOI வழக்கில் உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பைப் போல) பென்சன் வழங்க மத்திய அரசுக்கு உத்திரவிட்டது.
            மத்திய அரசு விட்டு விடுமா? CAT எர்ணாக்குளத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்சநீதி மன்றம் மத்திய அரசின் மேல்முறையீட்டைத்  தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. எனவே மத்திய அரசுக்கு  ஓய்வூதியம் அமைப்பதில் ‘33 வருட பணி விதியை 2006 க்கு முந்தைய எல்லா மத்திய அரசு ஊழியர்களுக்கும் நீக்குவதைத் தவிர்த்து வேறு வழி இல்லாமல் போனது. ஆகவே இப்பொழுது , Ministry of Personnel, Pensions and Public Grievances என்னும் மத்திய அமைச்சகம்  33 வருட பணி’ விதியை நீக்கவுள்ள அரசானைக் கடிதத்தை அனுப்ப இருக்கிறது .
சரி, இனி சிப்பாயிலிருந்து - மேஜர் ஜெனெரல் வரைக்குமான எல்லோர் ஓய்வூதியத்திலும்  இது என்ன விளைவை ஏற்ப்படுத்தப் போகிறது?  
ரேங்க் வெய்டேஜ் உடன் 33 வருடம் பணிக்காலம் முடித்திராதவர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்த பட்ச பணிக்காலம் முடித்திருந்தால் (அதாவது சிப்பாய்க்கு 15 வருடமும், அதிகாரிகளுக்கு 20 வருடமும் ) முழு ஓய்வூதியம் கிடைக்கபெறும். பதினைந்து வருடம் பணி காலம் முடித்த ’ Y ‘ குரூப் சிப்பாய் ஒருவருக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?  2006 க்குப்பின்னர் ஓய்வடைந்த அதே குரூப்பைச் சார்ந்த அதே அளவு பணி காலம் முடித்த சிப்பாய்க்கு எந்த அளவு கிடைக்குமோ அதே தொகை தான், அதாவது   ரூ 6,000௦௦௦ கிடைக்க வேண்டும்.
அப்படியானால் நிலுவைத்தொகை எவ்வளவு? உதாரணத்துக்கு, 15 வருடம் பணி முடித்த சிப்பாய்க்கு மாதம் ரூ 6000 – ரூ 3883 (சர்க்குலர் 547 படி ) = ரூ 2,117. இத்துடன் இதற்குரிய பஞ்சப்படி(DR) யும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இந்நிலையில் அரசு என்ன செய்யவிருக்கிறது? ஜனவரி 2006 லிருந்து 2015 வரைக்குமான நிலுவைத்தொகை வழங்குவதைத் தவிர்க்க முயற்ச்சிக்கலாம். இதற்காக  நிலுவைத் தொகை ஏதும் இல்லாதவாறு எல்லோரது ஓய்வூதியத்தையும் ஜனவரி 2006 இன்படி திருத்தி அமைக்கலாம். அவ்வாறு செய்யப்பட்டால் நிலுவைத் தொகை ஏதும் இராது.
அல்லது உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கிய தேதியிலிருந்து, அதாவது 2015இலிருந்து மட்டும் ஓய்வூதியத்தைத் திருத்தி அமைக்கலாம். அவ்வாறு செய்யப்பட்டால் ஓய்வூதியம் மிகக் குறைவாகவே இருக்கும்.
ஆனால் அரசு அவ்வாறு செய்வது நியாயமான செயலாகுமா? உச்ச நீதி மன்றம்  எஸ் பி எஸ் வைன்ஸ் Vs UOI  வழக்கில் வழங்கிய தீர்ப்புப்படி பார்த்தால் அது முற்றிலும் தவறான செயலாக முடியும்.
இது குறித்து TSEWA என்ன செய்யவிருக்கிறது? நாம் (TSEWA) நிலுவைத்தொகை 2006 இலிருந்து வழங்கப்பட வேண்டும் என்று நீதி மன்றத்தில் வலியுறுத்த இருக்கிறோம். அதற்காக நீங்கள் TSEWA வில் உறுப்பினர்களாகச் சேர்வீர்களானால் கணிசமான அளவு JCO, NCO, OR மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் சேர்ந்தவுடன், Armed  Forces Ttribunal (AFT) டெல்லியில் வழக்குத் தொடர்வோம். அவசியப்பட்டால் உச்சநீதி மன்றம் வரை வழக்கை எடுத்துச் செல்வோம்.
‘Y’ குரூப் சிப்பாய்க்கு மாதத்திற்கு ரூ 2,117 + DR என்ற விதத்தில், உங்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத்தொகையை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளலாம்.
நான் சொல்வது சரிதான்  என்று நீங்கள் உணர்ந்தால் TSEWA வில் நீங்கள் உருப்பினராகச் சேர்ந்து நமக்கு நேர்ந்துள்ள அநீதியை எதிர்த்து வழக்குத் தொடுத்துப் போரிடலாம்.
மற்ற விபரங்களுக்கு கீழ்க்கண்ட  கைபேசி எண்ணிலோ அல்லது  .......  என்ற இமெயில் முகவரி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

[Note:  Brig C S வித்யாசாகர்   முன்னாள் முப்படை வீரர்கள் நல சங்க” (Triservices Veterans Welfare Association – TSEWA ) தலைவர். இவர் Bombay Engineering Ggroup ஐ சார்ந்த இந்திய இராணுவத்தின் முன்னாள் அதிகாரி.  இவ்வமைப்பு முன்னாள் படை வீரர்களுக்கு இந்திய அரசு இழைத்து வரும் அநீதிகளை எதிர்த்துக் குரல் கொடுத்து வருகிறது   
  திரு. Lt.Col.பழனிச்சாமி அவர்கள் தற்போது ராஜஸ்தானில் வசித்து வருகிறார்கள்.
தொடர்பு கொள்ள கைபேசி எண் : 9968253110 and 8875448800.

இந்த கட்டுரையை நன்கு படித்து புரிந்துகொண்டு பின்னர் Brig.வித்யா சாகர் அல்லது Lt.Col.N பழனிச்சாமி அவர்களை தொடர்பு கொள்ளவும். 

உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்.









அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்


இந்த பொங்கல் திருநாளில் நம் மக்கள் அனைவரும் எல்லா நலன்களும் பெற்று, மகிழ்ச்சியுடன் வாழ எமது வாழ்த்துக்கள்.

Sunday, 10 January 2016

அறிவிப்பு

அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு
(District Legal Services Authority)
மாவட்ட நீதி மன்ற வளாகம்,
திருநெல்வேலி 627002.
--oOo--
முன்னாள் ரானுவதினர்களுக்கான, ராணுவ தீர்ப்பாயம் பற்றிய
(Armed Forces Tribunal)  சட்ட விழிப்புணர்வு முகாம்,
வருகின்ற
19-01-2016 செவ்வாய் கிழமை காலை 11.00 மணி அளவில்,
திருவேல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் வைத்து நடைபெறும்.

முகாமில் ராணுவ தீர்ப்பாயம் பற்றியும், வழக்கு தொடரும் வழி முறைகள் பற்றியும் விளக்கப்படும்.

எனவே திருநெல்வேலி மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுகொள்ளப் படுகிறார்கள்.

இவண்
திருநெல்வேலி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு
மாவட்ட நீதிமன்றம், திருநெல்வேலி 627002.
--oOo--

மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ளவேண்டிய முகவரி,
எக்ஸ் வெல் அறக்கட்டளை,
15 G மிலிடரி லைன்ஸ், சமாதானபுரம்,
திருநெல்வேலி 627002.
போன்:0462-2575380



Friday, 8 January 2016

எக்ஸ் வெல் அறக்கட்டளையின் பத்தாவது ஆண்டு விழா





அறக்கட்டளை நிர்வாகிகள்
 எக்ஸ் வெல்
அறக்கட்டளையின்
பத்தாவது ஆண்டு விழா
பாளையம்கோட்டை. சாந்திநகர், மணி மஹாலில் கடந்த
 03.01.2016 ஞாயிறு காலை 10.00 மணிக்கு தொடங்கியது.
முதற்கண் வெள்ளத்தில் மாண்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு R.செல்லப்பா அவர்கள் தலைமை தாங்க
சிறப்பு விருந்தினர்களாக 
திரு.Wg.Cdr.P.J.விக்டர்,அவர்கள்
திரு.Sgt.S.சண்முகம் அவர்கள், பேரளம்.
திரு.Cpl.மோகன ரங்கன் அவர்கள், சென்னை.
திரு.Sgt.டேவிட், அவர்கள். கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் . எண்பது வயதான திருமதி.பார்வதி அம்மாள், Hon.Capt.செல்லதுரை , Nk.துரைபாண்டியன், மற்றும் சௌரிய சக்கரா விருது பெற்ற திரு.c.ராமமூர்த்தி அவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.  சிறப்பு விருந்தினர்களும், நன்கொடையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர். கடந்த பத்தாண்டுகாளாக அறக்கட்டளையின் சேவையைபற்றியும், உடனிருந்து சிறப்பாக சேவை புரிந்த திரு.S.கந்தையா, திரு.நடராஜன், திரு.C.முத்துக்கிருஷ்ணன் அவர்களையும்  பாராட்டினார்.
திருநெல்வேலி ECHS மருத்துவ மனையில் அனைவருக்கும் இன்முகத்துடன் சிறந்த சேவை செய்துவரும்
திரு.Hav.V.சங்கரன், Nursing Asst./ECG  Tech.,
திரு.ஈஸ்வரன், Radiographer. 
திரு.S.ஈஸ்வரன், Radio Grapher, மற்றும் திரு.S.அரசகுமார், Physiotherapist, ஆகியோர் நிகழ்ச்சியில் பொன்னாடை போர்த்தி  கௌரவிக்கப்பட்டு, பாராட்டு பத்திரமும் வழங்கப்பட்டது.
திரு.அரசகுமார்
திரு.சங்கரன்

 விழாவில் ஏழை, எழிய பொது மக்களுக்கு வேஷ்டி, சட்டை, சேலை, சுடிதார் வழங்கப்பட்டது.
மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறநாழி
செல்வி.M.அபர்ணாவுக்கு நவீன செயற்கை காலணிகளை வள்ளல் திரு.C.ராமமுர்த்தி அவர்கள் வழங்கினார்கள்.  மறு நாள் Rs.5000 க்கான காசோலையும் வழங்கினார்கள். 
செல்வி அபர்ணாவுக்கு காலணி வழங்கும் காட்சி.
 செல்வி.அபர்ணா மேடைக்கு அழைத்து வரும்போது அனைவரும் கருணையுடன் பார்த்தனர் .  பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.Sgt.C.முத்து கிருஷ்ணன் அவர்கள் மிகவும் உருக்கமாக அபர்ணாவின் ஏழ்மை நிலையை விவரிக்கும் போது, உணர்ச்சிவசப்பட்டு பலர் எழுந்துவந்து கண்ணீருடன் நிதியுதவி செய்தது  மறக்கமுடியாத மனித நேய காட்சி.
அபர்ணாவுக்கு கிடைத்த நிதியுதவியை கண்ட அவள் பெற்றோர் ஆனந்தகண்ணீர் விட்டு நன்றி சொல்ல கூட முடியாமல் திணறினர்.
நம் மக்களின் மனிதய நேயத்தை கண்டு  எக்ஸ் அறக்கட்டளை பெருமிதம் கொள்கிறது.
திரு.வேலு நிதி உதவி

திரு.சுவாமிநாதன் நிதி உதவி

டாக்டர்.திருமதி.முத்து மீனாள் நிதி உதவி

திரு.சத்திய சீலன் நிதிஉதவி

கேப்டன் ஆறுமுகம் நிதி உதவி.

சுபேதார்.லாரன்ஸ் நிதி உதவி.

நல்ல மதிப்பெண்கள் பெற்ற ராணுவத்தினர் குழந்தைகளுக்கும், மறைந்த ஒரு BSF வீரர் மகள்கள் இருவருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
கல்வி உதவி

“தெரிந்து கொள்ளுங்கள்” என்ற
பென்சன் வழிகாட்டி புத்தகத்தின்
இரண்டாம் பதிப்பை Wg.Cdr.P.J.விக்டர் அவர்கள்  வெளியிட,  பேரளம், திரு.Sgt.S.சண்முகம் அவர்கள் பெற்றுகொண்டார்கள்.
ஒவ்வொரு பென்சனரும் படிக்கவேண்டிய புத்தகம்
 
திரு.விக்டர் வெளியிட திரு.சண்முகம் பெறுகிறார்.
பின்னர் திருமதி.லட்சுமி அவர்கள்
அனைவருக்கும் அரை மணி நேரம் தியான பயிற்சி அளித்து,  தியானத்தின் அவசியம் பற்றி விளக்கினார்.
“நங்கூரம்” என்ற முதியோர் மனமகிழ் மறு வாழ்வு மையம் பற்றிய ஒரு குறும் படம் திரையிடப்பட்டது. 
திரு.ராஜசேகர், நங்கூரம்

செந்தூர் கவிஞர் திரு இல.நாதன் அவர்கள் ராணுவ வீரர்கள் தியாகம் பற்றியும், நம் அறக்கட்டளையின் சேவை பற்றியும் ஒரு அருமையான கவிதையை அரங்கேற்றினார்.
திரு.இல.நாதன், கவிஞர்
திரு.நாரும்புனாதன், முக நூல் புகழ் எழுத்தாளர்
அரங்கத்தில் மக்கள் கூட்டம்

முக நூல் புகழ், எழுத்தாளர் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவர் திரு.நாறும்பூ நாதன் அவர்கள் நமது சேவையை பாராட்டி பேசினார்கள்.
முதியோர் சேவை பற்றியும், இறுதிகட்ட மருத்துவ சிகிச்சை (Terminal Care) பற்றியும், மறுவாழ்வு மையங்கள் பற்றியும் Sgt.டேவிட் அவர்கள் மிகவும் உருக்கமான உரையாற்றினார்கள்.
தமிழகம் முழுவதுமுள்ள ராணுவ பென்சனர்களுக்கு தான் ஆற்றி வரும் சேவை பற்றி Sgt.S.சண்முகம் விளக்கினார்கள்.
Cpl.மோகன ரங்கன் (TAFVA)அவர்களும், NEXCC திண்டுக்கல் மாவட்ட தலைவர் திரு.ரவி அவர்களும், கோவையிலிருந்து திரு.சத்தியசீலன் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.
நண்பகல் 1.30 க்கு சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது.
மதிய உணவுக்குப்பின் திரு.Sgt.C.முத்து கிருஷ்ணன் அவர்கள் உருவாக்கிய, பல  இனிமையான பாடல்களுடன்  கூடிய பென்சன் மற்றும் நமது மருத்துவ திட்டம் பற்றிய  அருமையான படக்காட்சியும் தெளிவான விளக்கமும் கொடுக்கப்பட்டது. பென்சன் கேள்விகளுக்கு திரு S.சண்முகம் அவர்களும் திரு S.கந்தையா அவர்களும் பதில் அளித்தார்கள்.
ஜீவன் பிரமாண், மற்றும் டிஜிட்டல் லாக்கர் பற்றி Sgt.C.முத்து கிருஷ்ணன் விளக்கம் அளித்தார்கள்.  ஒரு சிலருக்கு டிஜிட்டல் லாக்கர் கணக்கும் திறந்து கொடுக்கப்பட்டது.
நிகழ்சிகளை அருமையாக தொகுத்து வழங்கினார் திரு முத்து கிருஷ்ணன் அவர்கள்.
திரு.நடராஜன் அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவடைந்தது.
இந்த ஆண்டுவிழா மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று அனைவரும் பாராட்டிய செய்தியை அனைத்து உள்ளூர் பத்திரிக்கைகளும் வெளியிட்டு பெருமை சேர்த்தது மறக்கமுடியாதது.
இந்த விழாவின் வெற்றிக்கு அனைவருக்கும் நன்றி.



எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...