Sunday, 24 February 2013

இராணுவ தீர்ப்பாயம்




இராணுவ தீர்பாயங்கள் சாதித்தது என்ன ? 
 
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாக்கப்பட்ட இராணுவ தீர்ப்பாயங்கள், கடந்த மூன்றரை ஆண்டுகளில் சுமார் 4000 – 5000 வரை நல்ல தீர்ப்புகள் வழங்கி உள்ளன.  ஆனால் அதில் பெரும்பாலான தீர்ப்புகள் இன்னும் அமுல் படுத்தவில்லை என்பது
மிகவும் வருந்தத்தக்க செய்தி.   சாதாரண படை வீரர்களை உச்ச நீதிமன்றம் வரை
இழுத்தடிப்பதர்க்கு இராணுவ அமைச்சகம் தயங்குவதில்லை.

செயல்படுத்த படாத தீர்ப்புகளுக்கு ராணுவ அமைச்சகத்தின் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியாத நிலையும் உள்ளது.  நல்ல தீர்ப்பு பெற்றவர்கள் அதை நடைமுறை படுத்த விண்ணப்பம் கொடுக்காமல் எந்த தீர்ப்பையும் அமுல் படுத்த வேண்டாம் என்று
கடிதங்களும் அனுப்பி உள்ளது.  நீதி, நேர்மையற்ற ஒருசில அரசின் கொள்கைகளை இந்த
தீர்ப்பாயங்கள் சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல தீர்ப்பு வழங்கும்போது
அதை அமுல்படுத்த மறுக்கிறது அரசு.

நீதி மன்றத்தில் வழக்கு தொடுப்பவர்கள் அரசின் எதிரிகளாக கருதப்படுகின்றனர்.  எந்த ஒரு வழக்கையும் உச்ச நீதி மன்றம் வரை எடுத்து செல்லும் எண்ணத்தில் வாதாடுகின்றனர்
அரசு வழக்கரிஞர்கள். இதை ஒரு சாதாரண படை வீரனால் ஏற்றுகொள்ள முடியாது.
எனவே ராணுவ தீர்ப்பாயம் என்பது வெறும் கண்துடைப்பு போல் தெரிகிறது.
தீர்ப்புகள் அனைத்தும் இராணுவ அமைச்சகத்தை பாதிப்பதால் இந்த
தீர்ப்பாயங்களை இராணுவ அமைச்சகம் தன் கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொடுள்ளது.

இராணுவ தீர்ப்பாயங்கள் சுதந்திரமாக செயல்பட இவை சட்ட அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும்.  இது சம்பந்தமான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு
அமுலாகும் போதுதான் விடிவு காலம் பிறக்கும்.

@@@@@@@


Saturday, 23 February 2013

சுவிகியா மென் பொருள்



 மேம்படுத்தப்பட்ட பென்சன் விவரங்கள்

“சுவிகியா” மென் பொருளில் தற்போது கிடைக்கிறது.

இராணுவ பென்ஷனை தெரிந்து கொள்ள உதவும் மென் பொருள் “சுவிகியா”.  இதை உருவாக்கியவர்கள் இராணுவ பென்சன் தலைமை கணக்கதிகாரியான  (Controller General of Defence Accounts, New Delhi). 
இராணுவ பென்சனர்களுக்கு நெடுங்கால தேவையாக இருந்த இந்த
இந்த மென் பொருளை உருவாக்கிய CGDA க்கு
எமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

இது CDGA வின் இணைய தளமான www.cgda.nic.in  இல் கிடைக்கிறது.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட பென்சன் விவரங்கள் இந்த மென் பொருளில் இணைக்கப்பட்டு
24.09.2012 முதல் கொடுக்கவேண்டிய கூடுதல் பென்ஷனை இந்த மென்பொருள் தெரிவிக்கிறது.

குறுகிய காலத்தில் இதை உருவாக்கி அதை இணைய தளத்தில் அனைவரும் பயன்பெறும் வண்ணம் வெளியிட்ட  இராணுவ கணக்கதிகாரிகளுக்கு
எமது மனமார்ந்த நன்றி.

இந்த மென் பொருள் மூலம் எவ்வாறு உங்கள் பென்ஷனை தெரிந்து
கொள்ளலாம் என்பதை எமது பென்சன் வழிகாட்டி புத்தகத்தில் தெளிவாக கொடுத்துள்ளோம்.  இந்த புத்தகத்தை அனைவரும் வாங்கி
படித்து, ஒவ்வொரு பென்சனரும் தனக்கு எவ்வளவு பென்சன்
கிடைக்க வேண்டும் என்பதை தெரிந்து அதை அச்சிட்டு
 வைத்துகொள்வது  நல்லது.
இது ஒரு அறிய வாய்ப்பு.

Saturday, 16 February 2013

என் தேசம என் மக்கள் என்ன சொல்கிறார்கள் ?

மருத்துவ செலவு மக்களை 
வாட்டி வதைக்கிறது 
இதற்க்கு என்ன முடிவு ? 

இந்த விஜய் டி.வி. நிகழ்ச்சியை பாருங்கள் 
உடனே நமது மருத்துவ திட்டத்தில் சேருங்கள்

En Desam En Makkal 10-02-2013 - En Desam En Makkal

மேல  உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Thursday, 14 February 2013

முன்னாள் படை வீரர் தகுதி.- எக்ஸ் ரிக்ருட்



முன்னாள் படை வீரர் தகுதி
(Ex-servicemen Status to Ex-recruits)

இராணுவத்தில் சேர்ந்து பயிர்ச்சியின்போது காயம் பட்டு, மருத்துவ குழுவால் இராணுவ பணிக்கு தகுதி இல்லாமல் இயலாமை பென்சனுடன் வெளி வந்தவர்கள்
(Ex-Recruits boarded out or relieved on medical ground and granted medical disability pension)  இனிமேல் “முன்னாள் படை வீரர்”களாக கருதப்படுவார்கள்.
இவர்களுக்கு மற்ற முன்னாள் படை வீரர்களிப்போல் வேலைவாய்ப்பில்
அனைத்து முன்னுரிமைகளும் வழங்கப்படும்.

இந்த சலுகை முன்னர் இவர்களுக்கு வழங்கப்படாமல்
இருந்தது.  சமீபத்தில் 04.10.2012 இல் வெளிவந்த அரசு அறிவிப்பு
இவர்களுக்கு “எக்ஸ் சர்விஸ் மென்” அந்தஸ்தையும்
வேலை வாய்ப்பையும் வழங்கும் என்பது நல்ல செய்தி.

இந்த அரசு அறிவிப்பை பெற
இந்த  அரசு அறிவிப்பை 
பல நண்பர்கள் என்னிடம் கேட்டதால் 
இது வெளியிடப்படுகிறது.

Monday, 11 February 2013

மேம்படுத்தப்பட்ட குடும்ப பென்சன்



மேம்படுத்தப்பட்ட இராணுவ குடும்ப பென்சன்
(Improvement in Defence Family Pension)

பொதுவாக இராணுவ குடும்ப பென்சனானது ஒரு படை வீரருடைய பதவி (Rank) மற்றும் குரூப் அடிப்படையில் இதுநாள் வரை நிர்ணயிக்கப்பட்டது.  ஆனால் தற்போது 24.09.2012 முதல் , ஒரு படைவீரர் பணி புரிந்த காலத்தையும் கணக்கிலெடுத்து நிர்ணயிக்கபடுகிறது. (Qualifying Service) எனவே ஒரு குடும்ப பென்சனருடைய சரியான பென்ஷனை தெரிந்து கொள்ள அந்த படை வீரருடைய கீழ் கண்ட முக்கிய தகவல்கள் தேவை.

     (1) படை வீரருடைய பதவி (Rank)
            (2) படை வீரருடைய பணிக்காலம். (Qualifying Service)
            (3)அவர் வகித்த பணிப்பிரிவு. (Group)

இந்த தகவல்கள் 01.04.1985 க்கு முன்னர் ஒய்வு பெற்று வந்தவர்களின் பென்சன் ஆணைகளிலோ அல்லது இந்த கால கட்டத்தில் இறந்துபோன படை வீரர்களின் குடும்ப பென்சன் ஆணைகளிலோ தெளிவாக இருக்காது.  ஆனால் 01.04.1985 க்கு பின்னர் வெளி வந்தவர்களுக்கு இந்த தகவல்கள் அவர்களுடைய பென்சன் ஆணைகளில் இருக்கும்.

எனவே 01.04.2012 க்கு முன்னர் வெளி வந்தவர்களுக்கு இப்போதைய அரசாணைகளின்படி சரியான குடும்ப பென்சன் வழங்குவதில் வங்கிகளுக்கு சிரமம் உள்ளது.   ஆகவே இந்த குடும்ப பென்சனர்கள் மேலே குறித்த இந்த மூன்று தகவல்களையும் வங்கியில் காண்பித்து அதன் நகல்களை அந்தந்த வங்கியின் மத்திய பென்சன் அலுவலகங்களுக்கு உடனே அனுப்ப வேண்டும். (CPPC) இது முக்கியம்.  புதிய குடும்ப பென்சன் ஆணைகளின்படி ஒரே பதவி, ஒரே குருப்பாக இருந்தாலும் பணிக்காலம் அதிகமாகும் போது பென்சனும் மாறுபடும் என்பதை தெரிந்து கொள்ளவும்.

15 ஆண்டு சர்விஸ் முடித்த “X” குரூப் சார்ஜெண்ட் மனைவிக்கு பென்சன் ரூ.4467.  ஆனால் 20 ஆண்டு சர்விஸ் முடித்த “X”  குரூப் சார்ஜெண்ட் மனைவிக்கு ரூ.4656.

பணிக்காலம் அதிகரிக்கும்போது பென்சனும் அதிகருக்கும்.  எனவே மேல குறித்த இந்த முன்று தகவல்களையும் ஒவ்வொரு குடும்ப பென்சனரும் தெரிந்துகொண்டால்தான் சரியான பென்சன் பெற முடியும்.

Sunday, 3 February 2013

குடும்ப பென்சனும் குறை தீர்க்க போராடும் சங்கங்களும்



பென்சனுக்காக டெல்லியில் விதவைகளின் போராட்டம்

IESM சங்கத்தின் மாபெரும் போராட்டம்
 குடும்ப பென்சனும் 
குறை தீர்க்க போராடும் சங்கங்களும்.

சாதாரண குடும்ப பென்சன் தொகையானது, ஒரு படை வீரர் பணி விலகும் முன் வாங்கிய சம்பளத்தில் முப்பது சதவீதம் இருக்க வேண்டும் என்பது பொதுவான விதி. இதன் படி பல ஆண்டுகளுக்கு முன் ஒய்வு பெற்று வந்தவர்களின் உத்தேச சம்பளத்தை (Notional Pay) ஆறாவது ஊதிய கமிஷனில் சரியானபடி நிர்ணயிக்காத காரணத்தால் இவர்களுக்கு சரியான குடும்ப பென்சன் கடந்த ஆறு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.

இந்த அநீதியை IESM என்ற சங்கம் ஒன்று தான் சரியான முறையில் அரசுக்கு எடுத்து சொல்லி, இவர்களுக்கு நீதி கிடைக்க செய்தது.  இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த பதவியிலுள்ள சிப்பாய், நாயக் மாற்றும் ஹவில்தார் இவர்களின் விதவைகள் தான்.

உதாரணத்துக்கு 01.01.2006 முதல் ரூ.4467 என்ற நியாயமான பென்சன் பெறவேண்டிய ஒரு விமானப்படை சார்ஜெண்டின் மனைவி வெறும் ரூ.3500 மட்டுமே பெற்று வந்தனர். இது ஒரு மாபெரும் அநீதி என்று அரசுக்கு நன்கு தெரியும்.  அது தவிர சிப்பாய், நாயக், ஹவில்தார் ஆகிய இந்த மூன்று பதவியில் இருந்தவர்களின் விதவைகளுக்கும் ஒட்டுமொத்தமாக வெறும் ரூ.3500 தான் கடந்த ஆறு ஆண்டுகளாக கொடுக்கப்பட்டது. IESM சங்கத்தின் தொடர்ந்த போராட்டத்தால் இதை சரிசெய்ய முன் வந்தது அரசு.  அதுவும் 01.01.2006 முதல் வழங்காமல் 24.09.2012  முதல் மட்டுமே வழங்கமுடியும் என்று கூறியுள்ளது.  சுமார் ஒரு லட்சம் வரை பென்சன் நிலுவை தொகையாக கொடுக்க கடமைப்பட்ட அரசு ஒன்றும் கொடுக்கமால் ஏமாற்றிவிட்டது.

நாம் இவ்வாறு ஏமாற்றபடுவதர்க்கு முக்கிய காராணம் நம் மக்களின் அறியாமை தான்.  தவிர அகில இந்திய அளவில் 20 லட்சம் பென்சனர்களை கொண்ட இந்த நாட்டில், நமது குறைபாடுகளை எடுத்து சொல்ல வலுவான ஒரு சங்கம் இல்லாதது ஒரு மாபெரும் குறை.  வெகு நாட்களுக்கு பிறகு இப்போது ஒருசில ஒய்வு பெற்ற உயர் ராணுவ அதிகாரிகள் (Lt.Gen.Raj Kadyan, Maj.Gen. Satbir Singh)  களத்தில் இறங்கி போராட்டுவதால் ஒரு சில பலன்கள் கிடைக்கிறது.

எனவே இந்த அரசாணைகளால் பயன் பெற்றோர் உடனே IESM  என்ற சங்கத்தில் உறுப்பினராக சேருங்கள்.  தமிழ்நாட்டில் இந்த சங்கத்தின் பொறுப்பாளராக நமது மதிப்பிகுரிய Col.T.N. Raman  அவர்கள் சிறந்த சேவை செய்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் நூற்றுகணக்கான சங்கங்கள் இருந்தும் ஒரு சங்கம் கூட நமது ஒன்  ரேங்க் ஒன் பென்சனுக்காக ஒரு நாள் கூட எந்த போராட்டமும் நடத்தவில்லை. இவர்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவர Col.T.N. Raman அவர்கள் எடுத்து வரும் முயற்ச்சிக்கு எமது பாராட்டுக்கள். விரைவில் தமிழ் நாட்டில் IESM சங்கத்தின் மாபெரும் மாநாடு நடத்த வேண்டும் என்பது எமது அவா.

நமது மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த எமது எக்ஸ் வெல் அறக்கட்டளை பல புத்தகங்களை வெளியிட்டு வருகிறது.  இந்த சங்கங்கள் எமது புத்தகங்களை வாங்கி தமது உறுப்பினர்களை படிக்க சொல்வதின் மூலம் நல்ல ஒற்றுமையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடியும். 

சங்கங்களுக்கு சலுகை விலையில் புத்தகங்களை கொடுக்க எமது அறக்கட்டளை தயாராக இருக்கிறது. புத்தகங்களை வாங்கவும், IESM சங்கத்தில் சேரவும் எங்களை தொடர்பு கொள்ளவும்.  உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரிவிக்கவும். 




எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...