Sunday 3 July 2016

அரியர் தொகைக்கு பிடித்தம் செய்த வருமான வரி




அரியர் தொகைக்கு பிடித்தம் செய்த வருமான வரி

சமீபத்தில் பல ராணுவ பென்சனர்களுக்கு குறிப்பாக ஜெசிவோ, ஆனரரி ஆபிசர்களுக்கு வருமான வரி சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேலாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.  உண்மையில் இவர்கள் இவ்வளவு வரி கட்டவேண்டியது இல்லை. அரியர் தொகை ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்ற அளவில் கிடைத்ததாலும், அறியாமையின் காரணமாக பான் கார்டை வங்கியில் முன் கூட்டியே பதியாத காரணத்தாலும் இவர்களுக்கு கூடுதல் வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறியவும்.

எனவே பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வங்கியில் வரி பிடித்தம் செய்ததற்கான படிவம் 16 (Form 16) பெற்று, அதனுடன் ஏப்ரல் 2015 முதல் மார்ச் 2016 வரையிலான பென்சன் ஸ்டேட் மென்ட் பெற்று அதனுடன் பான் கார்டையும் இணைத்து ஒரு ஆடிட்டரிடம் கொடுத்து கூடுதலாக பிடித்தம் செய்த வரியை திரும்ப பெறலாம்.  அரியர் தொகைக்குரிய தனிப்பட்ட கணக்கையும் ஆடிட்டரிடம் கொடுக்க வேண்டும்.  (Yearly Break up of arrears).

வருகிற ஜூலை 31 ம் முன்னதாக உங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவேண்டும்.  உங்களுக்கு சுமார் ரூ.25000 வரை (Hon.Capt) பிடித்தம் செய்த வரி ஆகஸ்ட் மாதம் திருப்பி கிடைக்கும்.

இது பெற்றிய உதவி தேவைப்படுவோர் எங்கள் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளலாம். தொலை பேசி 0462-2575380.

ஒவ்வொருவருக்கும், ஒரு கைபேசியும், பான் கார்டும், ஆதார் கார்டும் அவசியம் தேவை.

85 வயதான ஒரு ஆனரரி கேப்டனுக்கு ரூ.60 ஆயிரம் வரி பிடித்தம் செய்திருந்தார்கள். அவர் எங்களிடம் வந்ததின் காரணமாக அவருக்கு ரூ.30000 திருப்பி கிடைக்க வேண்டிய உதவி செய்திருக்கிறோம்.



No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...