![]() |
| இது வங்கியா அல்லது ரயில்வே ஸ்டேஷனா ? |
இராணுவ குடும்ப பென்சனர்களின் அவல நிலையும்
வங்கிகளின் அலட்சிய போக்கும்
ஒரு அரசுடமையாக்க பட்ட வங்கியின் ராணுவ விசேஷ குடும்ப
பென்சன் மற்றும் போரில் உயிர் நீத்த வீரர்களின் விதவைகளுக்கு வழங்கப்படும் பென்சன்
பட்டியலை பார்க்க நேர்ந்தது.(Pension list of Special Family Pension and
Liberalised Family pension) அதை கண்டு
உண்மையில் நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.
காரணம் அந்த பட்டியலில் உள்ள சுமார் 115 பேருக்கும் சரியான பென்சன்
வழங்கப்படவில்லை.
அனைவருக்கும் வெறும் சாதாரண பென்சன்
வழங்கபட்டிருக்கிறது. அவர்களுக்கு கிடைக்க
வேண்டிய பென்சனில் சரி பாதிதான் வழங்கபட்டிருந்தது.
ராணுவ பணி நிமித்தம் கணவனை இழந்த ஒரு விதவைக்கு இன்றைய
தேதியில் குறைந்த பட்சம் Rs.7000/- அடிப்படை பென்சன் (DA வுடன் சேர்த்தால் Rs.14000/) வழங்கவேண்டும்
என்று அரசாணைகள் உள்ளன. இருந்த போதிலும்
இவர்களுக்கு வங்கிகள் வெறும் Rs.3500/- தான் அடிப்படை பென்சன் வழங்குகிறது. இதேபோல் போரில் உயிர் நீத்த வீரர்களின்
விதவைகளுக்கு இன்றைய தேதியில் Rs.9880/- அடிப்படை பென்சன் (DA வுடன் Rs.19760/-) ஆனால் வெறும் Rs.5763/- தான் வழங்க படுகிறது. “F” என்ற முதல் எழுத்தை PPO நம்பரில்
கொண்டவர்களுக்கு 01.01.2006 முதல் குறைந்தது Rs.7000/- அடிப்படை பென்சன் வழங்கவேண்டும். அதேபோல் “FBC” என்ற முதல் எழுத்துகளை கொண்ட PPO
நம்பர் உள்ளவர்களுக்கு குறைந்தது Rs.9880/- வழங்கவேண்டும். ஆனால் இந்த பட்டியலை
பாருங்கள் எவ்வளவு குறைவாக கொடுக்க படுகிறது என்று.
ஒரு அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் இப்படி தவறு நடக்கிறது.
இதை கேட்க யாருமில்லை. இது ஒரு வங்கியின்
பட்டியல் தான், அதுவும் தமிழ் நாட்டில் மட்டும்தான். மற்ற வங்கி களையெல்லாம் சேர்த்து அகில இந்திய
அளவில் பார்த்தால் எவ்வளவு பேர் பாதிக்க பட்டிருப்பார்கள் சற்று சிந்தித்து பாருங்கள். இந்த பட்டியலில் மட்டும் கணக்கிட்டு
பார்த்ததில் சுமார் நான்கு கோடி ரூபாய்க்கு மேல் குறைவாக கொடுக்கபட்டிருக்கிறது.
பாரத ஸ்டேட் வங்கி சுமார் 36 லட்சம் பென்சனர்களுக்கு
பென்சன் வழங்குகிறது. இந்த பென்சன்
கணக்குகள் அனைத்தும் நாட்டில் உள்ள ஒன்பது முக்கிய நகரங்களில் வைத்து தான்
கணக்கிடப்படுகிறது. கிராமத்திலுள்ள
பென்சனர்கள் இந்த நகரங்களுக்கு சென்று தனது பென்சன் குறைகளை முறையிட முடியாத நிலை
உள்ளது. எனவே தவறுகள் தொடர்ந்த வண்ணம்
இருக்கிறது. ஒரு சிலருக்கு குறைகளை கண்டு
பிடித்து முறையிடும் போது நிலுவை தொகையை மட்டும் வங்கி வழங்குகிறது. தாமதமாக வழங்கப்படுவதற்கான நஷ்ட ஈடை
கொடுப்பதில்லை. (Banks are not paying the compensation for the delayed payment
of arrears as per RBI guidelines.)
இந்த பட்டியலை சில மாதங்களுக்கு முன் எமது வலைதளத்தில்
வெளியிட்டு, இவர்களைப்பற்றி விபரம் கேட்டிருந்தோம். இதுவரை ஒரு பதில் கூட வரவில்லை. நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள
ஒருசிலரை எமது அறக்கட்டளை கண்டு பிடித்து அவர்களுக்கு சரியான பென்சனும் பல லட்சம்
அறியர் தொகையும் பெற்று கொடுத்தோம்.
தற்போது இதை பார்பவர்கள் பாதிக்க பட்டவர்களுக்கு
தெரிவிக்கவும்.
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ராணுவ குடும்ப பென்சனர்கள் இதை படிக்க வாய்ப்பில்லை. இதை படிக்கும் மற்றவர்கள் உதவி செய்தால்தான் பயன் கிடைக்கும். முன்னாள் ராணுவத்தினர் அதிகம் சந்திக்கும் இடமான ராணுவ கான்டீன் மற்றும் ECHS பாலி கிளினிக்கு களில் இதை அச்சிட்டு ஒட்டவும்.
எங்களையும் தொடர்பு கொள்ளலாம். இதை படித்தமைக்கு மிக்க நன்றி.


