Wednesday 29 October 2014

பாரத ஸ்டேட் வங்கியின் புதிய பென்சன் லோன் திட்டம்.





பாரத ஸ்டேட் வங்கியின் புதிய பென்சன் 
லோன் திட்டம்.
(அக்டோபர் 2014 முதல்)

நீங்கள் மத்திய, மாநில அரசு பென்சனராக இருந்து, பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பென்சன் வாங்குபவராக இருந்து வயது 76 க்கு மேல் ஆகாமல் இருந்தால் உங்கள் மாதாந்திர பென்சனைப்போல் 18 மடங்கு பென்சனை சில நிபந்தனைக்குட்பட்டு கடனாக பெறலாம்.

மாநில பரசு பென்சனர்களுக்கு கூடுதல் நிபந்தனை என்னவென்றால் :-

1.    மாநில அரசு பென்சனர்கள் இந்த கடன் பெறும்போது, தனது பென்சனை வேறு வங்கிக்கு மாற்ற மாட்டேன் என்ற உறுதி மொழி எழுதி கொடுக்க வேண்டும்.
2.    பென்சன் வழங்கும் ஸ்டேட் வங்கி கிளையின்  தடையில்லா சான்று (NOC) இல்லாமல் பென்சனர் கணக்கை வேறு வங்கிக்கு மாற்ற விரும்பும் பென்சனர் விண்ணப்பங்களை ஏற்றுகொள்ள மாட்டோம் என்ற உறுதி மொழி கருவூல அதிகாரியிடமிருந்து (Treasury Officer) பெற்று வங்கியில் கொடுக்க வேண்டும்.
3.    குடும்ப பென்சன் பெற தகுதியுள்ள அவர்  மனைவிக்கு 76 வயதுக்கு மேல் ஆகாமல் இருக்க வேண்டும்.  (இது மற்ற பென்சனர்களுக்கும் பொருந்தும்)

கடன் தொகை

பென்சனர்களுக்கு:-
குறைந்த பட்சம்  ரூ.25000/-
அதிக பட்சம்  18 மாத பென்சன் கீழ் கண்ட நிபந்தனைக்குட்பட்டு.
ரூ.14 லட்சம் ---72 வயது வரை.
ரூ.12 லட்சம் ---72 வயதுக்கு மேல் 74  வயதுக்குள்.
ரூ.7.5 லட்சம் –74 வயதுக்கு மேல் 76 வயதுக்குள்.

பின் குறிப்பு:
கடனுக்கு திருப்பி கட்டும் மாத தவணையனது(EMI) நிகர பென்சனில் 50% க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

குடும்ப பென்சனர்களுக்கு:-
குறைந்த பட்சம் ரூ.25000/-
அதிக பட்சம் 18 மாத பென்சன் கீழ் கண்ட நிபந்தனைகளுடன்.
ரூ.5 லட்சம்  -- வயது 72 வரை.
ரூ.4.5 லட்சம் 72 வயதுக்கு மேல்  74 வயதுக்குள்.
ரூ.2.5 லட்சம் 74 வயதுக்கு மேல்  76  வயதுக்குள்.

பின் குறிப்பு:
கடனுக்கு திருப்பி கட்டும் மாத தவணையானது நிகர பென்சனில்  33% க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

டனுக்கு பாதுகாப்பு:- (Collateral Security)
குடும்ப பென்சன் பெற தகுதியுள்ள அவர்  மனைவி கடனுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் அல்லது உறவினர்கள் அல்லது மூன்றாம் நபர் கடன் தொகைக்கு மதிப்புடையவர் பாதுகாப்பு வழங்கவேண்டும்.

திருப்பி செலுத்தும் காலம்:-
பென்சனர்களுக்கும் குடும்ப பென்சனர்களுக்கும்
72  வயது வரை  ------60  மாதம்.
72 வயதுக்கு மேல் ---48 மாதம்
74 வயதுக்கு மேல் ---24 மாதம்.

கடன் வழங்க கட்டணம் (Processing Fee)
கடன் தொகையில் 0.51% (சேவை வரி உட்பட) குறைந்த பட்சம் ரூ.250/-
(ஸ்டேட் வங்கி பென்சனர்களுக்கு இந்த கட்டணம் கிடையாது )
இந்த கடனுக்கு பென்சனர் பங்கு ஏதும் இல்லை. (Margin money: Nil)

வட்டி விகிதம் தற்சமயம் : 13.5%  (மாற்றத்திற்குட் பட்டது )
இப்போது ஒரு மாநில அரசு குடும்ப பென்சனர் (குறைந்த பட்ச பென்சன் பெறுபவர்) கூடுதல் எவ்வளவு கடன் பெறலாம் என்பதை பார்க்கலாம்.

வயது  மாத பென்சன் கடன் தொகை  திருப்பி கட்டும் காலம்  திருப்பி கட்டும் தொகை
72             6300            90000          60  மாதம்             2070
72 – 74        6300            75000          48  மாதம்             2030
74 – 78        6300            40000          24  மாதம்             1920
ராணுவ குடும்ப பென்சனர்கள் (குறைந்த பட்ச பென்சன் பெறுபவர்)
72              7245           100000       60  மாதம்               2300
72-74           7245            85000          48  மாதம்            2310
74-76           7245            50000          24  மாதம்            2390
ராணுவ பென்சனர்கள் (குறைந்த பட்ச பென்சன் பெறுபவர்கள்)
72              9800            140000        60  மாதம்             3225
72-74           9800            110000        48  மாதம்             2980
74-78           9800            65000          24  மாதம்            3110

குறிப்பு: வயது அதிகமாகும்போது கடன் தொகையும், திருப்பி செலுத்தும் காலமும் குறையும் என்பதை அறியவும்.  தான் வாங்கும் பென்சனுக்கு எவ்வளவு கடன் பெறலாம் , எவ்வளவு பிடித்தம் செய்வார்கள் என்பதை முன் கூட்டியே தெரிந்து கொள்ள ஏதுவாக இந்த பட்டியல் கொடுக்க பட்டுள்ளது.

ரூ.1 லட்சம் கடன் தொகைக்கு 5 வருடத்தில் திருப்பி கட்ட நீங்கள் செலுத்தும் வட்டி ரூ.38000/-
எனவே முக்கியமான காரணங்களுக்கு மட்டும் கடன் வாங்கவும்.  கண்டிப்பாக திருப்பி கட்டவேண்டும் என்பதையும் மறக்கக்கூடாது.
76 வயதான ஒருவருக்கு 7.5  லட்சம் கடன் கொடுக்கும் வங்கியை பாராட்டாமல் இருக்கமுடியாது.
அவ்வபோது கையில் அதிக பணம் இருக்கும் பொது கடன் கணக்கில் கட்டி கடனை சீக்கிரம் முடித்தால்  வட்டி குறையும் என்பதை அறியவும்.
கடன் வாங்கி ஒரு வருடம் ஒழுங்காக திருப்பி கட்டிய பின் சில நிபந்தனைகளுடன் இரண்டாவது கடன் பெறவும் வசதி உள்ளது என்பதை அறியவும்.  (Top up pension loan fecility)
வங்கிக்கு கடன் கேட்க செல்லும் முன் இந்த விவரங்களை நன்கு படித்து புரிந்துகொண்டால் நல்லது.  தெரிந்து வைத்து கொள்வது ஒரு சிறந்த ஆயுதமாக சில சமயங்களில் உதவும்.

வாங்கும் கடனை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்கையில் முன்னேற எமது வாழ்த்துக்கள்.

Sunday 26 October 2014

ஒன் ரேங்க் ஒன் பென்சன் என்ன ஆனது ?



தீபாவளி இனிப்பு வழங்கும் நமது பிரதமர்
ஒன் ரேங்க் ஒன் பென்சன் என்ன ஆனது ?

சமீபத்தில் சியாசின் பனி மலையில் நமது ராணுவ வீரகளுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி அவர்கள், ஒன் ரேங்க் ஒன் பென்சன் வழங்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளார். இதை நம்பாதவர்கள் கீழ் கண்ட இணைய தளத்தில் பார்க்கலாம்.
நமது ராணுவ வீரர்களின் தியாகத்தை பாராட்டிய பிரதமர் OROP யை பற்றிய உண்மையை கூற வில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் பிரதமர் நமது வீரர்களுக்கு இதை அறிவித்த அதே நேரத்தில் இங்கு டெல்லியில் நமது நிதி அமைச்சரும் பாது காப்பு அமைச்சருமான திரு அருண் ஜெயிட்லி அவர்கள் OROP yயை ஒரு பிரச்னையாக வர்ணித்து அதை ஒரு தீர்பாயத்தின் முடிவுக்கு (Referring to a Tribunal) விடப்போவதாக Times Now  என்ற TV  க்கு 22.10.14 இல் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.  பிரதமர் சொல்வதற்கும் பாது காப்பு அமைச்சர் கூறுவதற்கும் உள்ள முரண்பாடுகளை பார்த்தீர்களா ?

பிரதமரே பாதுகாப்பு அமைச்சரின் விருப்பபடி தீர்பாயத்தின் முடிவுக்கு விட சம்மதிக்கிறாரா ?  இந்த சூழ்நிலையில் முன்பு காங்கிரஸ் ஆட்சியில் அமைத்த காபினெட் செக்ரட்டரி கமிட்டிக்கும் இந்த தீர்பாயத்துக்கும் என்ன வித்தியாசம் ?

OROP  யை அமுல்படுத்த தேவைப்படும் நிதி ரூ.4500 கோடி என்று முப்படைகளின் தலைமை அலுவலகம் கூறியுள்ளது.  இதே கணக்கை தன் வழியில் உருவாக்கிய CGDA  ரூ.9100  கோடி செலவாகும் என்று கூறியுள்ளது.  (செலவு கணக்கை தணிக்கை செய்யும் பணி மட்டுமே கொண்ட CGDA , எவ்வளவு செலவாகும் என்ற கணக்கை பரிந்துரைக்க அரசு கேட்டு கொண்டது விந்தையாக இருக்கிறது.)  ராணுவ அமைச்சகத்தின் நிதி பிரிவில் எல்லா விபரங்களும் (Finance Division of MOD) இருக்கும் பட்சத்தில் CGDA வுக்கு ஏன் பரிந்துரைக்க வேண்டும் என்பதுதான் கேள்வி.

CGDA  கணக்கைவிட  முப்படைகளின் தலைமை அலுவலகம் குறைவாக கணக்கிட்டு கொடுத்த பட்டியலை அமுல் படுத்த ஏன் இந்த தயக்கம்?

சியாசின் பனிமலையில் ஒருநாள்மட்டும், ஒரு சில மணி நேரம் மட்டும் நமது வீரர்களுடன் இருந்து இனிப்பாக பேசி இனிப்பு வழங்கினால் மட்டும் போதாது.  சொல்லியதை செயலில்  காட்டவேண்டும் நமது பிரதமர்.  தான் கூறியதற்கும் அதே நேரத்தில் நிதி அமைச்சர் கூறியதற்கும் முரண்பாடு இருப்பதை தெரிந்த பிறகாவது நமது பிரதமர் விளக்கம் கூறியிருக்கவேண்டும்.  இதுவரை திரு அருண் ஜெயிட்லி கூறியதற்கு நமது பிரதமர் விளக்கம் கூற வில்லை.  அன்று நம் பிரதமர் ஆசையாக பேசி மோசம் செய்து விட்டார் என்றுதான் நேம் வீரர்களுக்கு நினைக்கதோன்றும்.

பொதுவாக ஒரு நாட்டின் நிதி அமைச்சர் ராணுவத்துக்கு செலவு செய்வதை விரும்பமாட்டார்.  துரதிர்ஷ்டவசமாக நமக்கு ஒருவரே நிதி அமைச்சராகவும் ராணுவ அமைச்சராகவும் வந்துவிட்டார்.  ஒரு பிரபல வழக்கறிஞர் ராணுவ அமைச்சராக வந்துவிட்டால் ராணுவ வீரர்கள் அனைவரும் நீதி கேட்டு உச்ச நீதிமன்றம் வரை செல்லவேண்டும்.  இதுதான் தற்போதைய நிலைமை.  எனவே OROP க்காக தீர்ப்பாயத்தை தேடுகிறார் நமது பாதுகாப்பு அமைச்சர்.

கடந்த தேர்தலில் நாடெங்கும் மோடி அலைவீசி ஜெயித்தது BJP.  ஆனால் அருண் ஜெயிட்லி மட்டும் அமிர்தசரஸ் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஒரு ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரியும் முன்னாள் பஞ்சாப் முதல்வருமான கேப்டன் அமரிந்தர் சிங்கிடம் தோல்வியுற்றார்.  தேர்தலில் தோல்வியடைந்த ஒருவருக்கு இரண்டு மாபெரும் அமைச்சு (Finance & Defence)  பணி கொடுப்பது ஜனநாயக விரோத செயலாகும்.  அதன் விளைவுதான் அவர் இன்று எல்லோரையும் நீதி மன்றத்துக்கு அழைக்கிறார்.

நமது பிரதமரோ இனிக்க இனிக்க பேசுகிறார்.  இந்தியில் மட்டுமே பேசுகிறார்.  இந்தி தெரிந்த மக்கள் அவர் பேச்சில் மயங்கி வாக்களித்துவிட்டு இன்று முழிக்கிறார்கள்.  125 கோடி மக்களுக்கும் இந்தி தெரியாது என்பது யாருக்கும் தெரியாதா ?  தகவல் தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறியுள்ள இந்த யுஹத்தில் அவர் பேசுவதை  மொழி பெயர்த்து ஒலி, ஒளி பரப்புவதில் என்ன சிக்கல்.  இந்தி தெரியாத, புரியாத மக்கள் நமது பிரதமர் மிகவும் உருக்கமாக பேசுவதை வெறும் ஊமை படம் பார்பதுபோல் பார்த்து கொண்டிருக்கின்றனர் .

மொத்தத்தில் இந்த சர்கார் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக .........

எது நடந்தாலும் நடக்காவிட்டாலும் நம் வீரர்கள் பட்டும் நம் எல்லைகளை கண் கொட்டாமல் கண்காணிக்கவேண்டும்.  இங்கு நாட்டில்,  தன் வீட்டில் எது நடந்தாலும் யாருக்கும் கவலையில்லை,  அவன் மட்டும் தன் பணியை செய்யவேண்டும்.  ஏன் என்றால் இது நாம் தாய் நாட்டை காக்க மேற்கொண்ட சத்தியம்.  சத்தியம் தவறாத உத்தமர் போல் நாம் மட்டும் வாழ வேண்டும், நாட்டையும் காக்க வேண்டும்.

சத்திய மேவ ஜெயதே
ஜெய் ஹிந்த்


 

Wednesday 22 October 2014

தீபாவளி நல் வாழ்த்துக்கள்


வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய
 தீபாவளி நல் வாழ்த்துக்கள்

Sunday 12 October 2014

மேம்படுத்த பட்ட ECHS கார்டு கட்டாயம் பெற வேண்டுமா ?





மேம்படுத்த பட்ட ECHS கார்டு கட்டாயம் பெற வேண்டுமா ?
(Is it compulsory to get upgraded ECHS Card ?)

ECHS திட்டம் 01.04.2003  முதல் தொடங்கப்பட்டது.  அப்போதிருந்தே உறுப்பினர்களுக்கு ஸ்மார்ட் கார்ட் வழங்கப்பட்டது.  நாம் அனைவரும் இந்த கார்டை பெற்று பழகி வரும் நிலையில் வேறு ஒரு புதிய கார்ட் வாங்க வேண்டும் என்ற செய்தி வருகிறது.  எதற்காக இந்த புதிய கார்டு வாங்க வேண்டும் என்று தெளிவாக எங்கும் கூறப்படவில்லை.

புதிய கார்டு ஆல் இந்தியா கார்டு என்கிறார்கள்.  பழைய கார்டை யும் அப்படித்தான் சொன்னார்கள்.  ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு வரும் ஒரு கார்டு  பெற்றுகொள்ளலாம் என்கிறது செய்தி.  ஆனால் ஒவ்வொருவரும் ரூ.135/- செலுத்த வேண்டும்.  கணவன், மனைவி இரு குழந்தைகள் இருந்தால் ரூ.540 செலுத்த வேண்டும். 

இது சம்பந்தமாக சில கேள்விகளை எழுப்பும் போது, ECHS  நிர்வாகம், “புதிய கார்டு தற்போதைக்கு கட்டாயம் இல்லை “ என்று கூறிவிட்டது.

புதிய கார்டும், அதற்குரிய மென்பொருளும் (Software from SITL) முழுமையாக உபயோகத்து வந்தால் ஒரு ECHS உறுப்பினருடைய முழு விபரமும் அதில் பதியப்படும்.  நோயின் தன்மை, எடுத்துகொள்ளும் மருந்துகள், அலர்ஜி சம்பந்தமான விபரங்கள் அனைத்தும் மருத்துவர்களுக்கு இந்த கார்டு மூலம் தெரியும்.

ஆனால் நடைமுறையில் இப்போது நடப்பது என்ன ?வெறும் டோக்கன் நம்பர் போடவும், மருத்துவ அதிகாரிக்கு வரிசை படுத்தவே உபயோக படுத்த படுகிறது.  புதிய மென்பொருள் நிறுவ பட்டதாக தெரிய வில்லை.  யாருக்கும் உரிய பயிற்சியும் கொடுக்க வில்லை.  இந்த சூழ்நிலையில் புதிய கார்டு வேண்டும் என்று சொல்வது சரியில்லை.  பல நிறுவனங்கள் இலவசமாக வழங்கும் இந்த ஸ்மார்ட் கார்டுக்கு நமது ECHS நிர்வாகம் ரூ.135  வசூலிப்பது நியாயம் இல்லை.  சாதாரணமாக ஒரு ஸ்மார்ட் கார்டு விலை சுமார் ரூ.25-30 க்குள் இருக்கும் என்கிறது ஒரு செய்தி.  இலவச மருத்துவ திட்டம் (பங்களிப்பு ஒரு புறம்) என்று சொல்லி, இப்படி கட்டணங்களை வசூலிப்பது சரியில்லை.  கான்டீன் ஸ்மார்ட் வாங்குவதிலும் இதே நிலை தான்.  கான்டீன் ஸ்மார்ட் கார்டு ஏன் இலவசமாக வழங்ககூடாது ?

இது தவிர சில பாலி கிளினிக்குகள் புதிய ECHS கார்டு பெற வங்கிகளிடம் NOC  வாங்கி வர நிர்பந்திக்கிறது. சம்பத்தப்பட்ட  STATION HQ இல் இது பற்றி கேட்டபோது “நாங்கள் அவ்வாறு நிர்பந்திக்க வில்லை” என்று சொல்கிறார்கள்.  மேலும் மிகவும் வயதான ECHS  உறுப்பினர்கள் குக்கிராமங்களில் இருந்து பெரும் செலவு செய்து STATION HQ க்கு நேரடியாக சென்று கொடுக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது.  அந்தந்த பாலி கிளிநிக்குகளே இந்த விண்ணப்பங்களை பெற்று  STATION HQ  க்கு அனுப்புவதில் என்ன கஷ்டம் ?  ஏன் இந்த பாலி கிளினிக்குகள் செய்யக் கூடாது ? திருநெல்வேலி பாலிகிளினிக் இந்த பணியை நல்ல முறையில் செய்கிறது.  Col. விக்டர் அவர்களுக்கும், ஊழியர்களுக்கும் எமது பாராட்டுக்கள்.

01.04.2003  முதல் இந்த திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு மெடிக்கல் அலவன்சை நிறுத்த வேண்டிய வங்கிகள் நிறுத்தாமல் இருந்துவிட்டு தற்போது திடீரென்று மொத்தமாக ரூ.28,000/-  கட்டவேண்டும் என்று சில பென்சனர்களை நிர்பந்திப்பதாக புகார்கள் வந்துள்ளன.  சில பாலி கிளினிக்குகள் (ஸ்ரீவில்லி புத்தூர்) இதற்க்கு துணை போவதாக செய்தி.
பல ஆண்டுகளாக பல பென்சனர்களுக்கு குறைந்த பென்சன் வழங்கி பல லட்சங்களை அரியர் தொகையாக வாங்கி கொடுத்த அனுபவம் எங்களுக்கு உண்டு.  “நாங்கள் ஒவ்வொரு பென்சனருக்கும் சரியான பென்சன் வழங்குகிறோம் “ என்று எந்த வாங்கியாவது கூற முடியுமா?  முடியாது என்பதுதான் உண்மை.  ஏனென்றால் “எனக்கு மெடிக்கல் அலவன்ஸ் கொடுக்காதீர்கள்” என்று பல முறை ஒரு பென்சனர் கூறியும் கண்டு கொள்ளாத வங்கி எப்படி சரியான பென்சன் கொடுப்பதாக சான்றளிக்க முடியும்.  தணிக்கையாளர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஆயிரத்தில் ஒரு பென்சனர் கணக்கை பார்த்து பிடிபட்டால்தான் தவறும் வெளிவரும்.  தற்போதைய நடைமுறையில் அனைத்து பென்சன் கணக்குகளையும் தணிக்கையாளர்கள் பார்ப்பதில்லை.  எனவே தவறுகள் வெளிவர வாய்ப்பு இல்லை. எத்தனையோ பென்சனர்களுக்கு சாகும் தருவாயில் பல லட்சம் பென்சன் அரியர் தொகை பெற்று கொடுத்த அனுபவம் எங்களுக்கு உண்டு.  இதேபோல் எத்தனையோ இராணுவ பென்சனர்களும்,  இராணுவ குடும்ப பென்சனர்களும் தன்  வாழ் நாளில் சரியான பென்சன் பெறாமல் காலமாகிவிட்ட நிலையும் உண்டு என்பதில் சந்தேகம் இல்லை.  நாம் அனைவரும் விழிப்புடன் இல்லாதவரையில் இந்த நிலை மாறாது. மொத்தத்தில் எமது கோரிக்கை என்னவென்றால் :-

1.    சம்பத்தப்பட்ட பாலி கிளிநிக்குகளே புதிய கார்டுக்கான விண்ணப்பத்தை பெற்று  Station HQ க்கு அனுப்பவேண்டும்.
2.    தவறாக வழங்கப்பட்ட மெடிக்கல் அலவன்ஸ் தொகையை மொத்தமாக திருப்பி கட்ட எந்த வங்கியும் நிர்பந்திக்க கூடாது.  விதி முறைகளின்படி குறைந்த தவணைகளில் வசூலிக்க வேண்டும்.
3.    முழுமையான ECHS மென்பொருள் பயன்படுத்தும்வரை பழைய கார்டுகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
4.    ECHS இன் SITL Software பயிற்சி அனைவளுக்கும் வழங்கவேண்டும்.
5.    ஸ்ரீவில்லி புத்தூர் பாலி கிளினிக் புதிய கார்டுக்கு வங்கியில் NOC கேட்டு நிர்பந்திக்க கூடாது.
6.    சரியாக பூர்த்தி செய்த புதிய ECHS  கார்டு விண்ணப்பங்களை உறுப்பினர்கள் Station HQ க்கு பதிவுத்தபாலில் அனுப்ப அனுமதிக்க வேண்டும்.  வயதான ECHS  உறுப்பினர்களை Station HQ க்கு நேரடியாக வரச்சொல்லி நிர்பந்திக்க கூடாது.

இதை படிக்கும் பல நல சங்க நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு இந்த கோரிக்கையை நேரில் எடுத்து சொல்லவேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...