Thursday 20 June 2013

முன்னாள் ராணுவத்தினருக்கு இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு .



இந்தியன் ரயில்வேயில் முன்னாள் ராணுவத்தினருக்கு வேலை வாய்ப்பு

Employment Notice No.RRC01/2013 dt. 08/06/2013

முன்னாள் ராணுவத்தினருக்கான விசேஷ அறிவிப்பு.  20% இட ஒதுக்கீடு.

மொத்த காலி இடங்கள் : 813 (தெற்கு ரயில்வே)
தகுதி: 15 ஆண்டுகள் ராணுவ சேவை.  ஆர்மி கிளாஸ் I சர்டிபிகேட் பாஸ்.
வயது: ராணுவ சேவை + 3 ஆண்டுகள்.
தேர்வுகள் எதுவும் கிடையாது.  ராணுவ சர்வீஸ் அடிப்படையில் தேர்வு செய்யபடுவர்.  மருத்துவ தகுதி அவசியம் வேண்டும்.
சம்பளம்: 5200 – 20200 .  கிரடு பே ரூ.1800/’ இதர படிகள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 08/07/2013.  மாலை 5  மணி.


இது ஒரு நல்ல வாய்ப்பு.  உடனே விண்ணப்பிக்கவும்.
 

Monday 17 June 2013

மேம்படுத்தப்பட்ட ECHS கார்டு



மேம்படுத்தப்பட்ட  ECHS கார்டு
(Upgraded ECHS Card)

முன்னாள் இராணுவத்தினர் பங்களிப்பு மருத்துவ திட்ட சிகிச்சை உறுப்பினர்களுக்கு அகில இந்திய அளவில் விருவுபடுத்த படுவதால், (PAN INDIA) ECHS மெம்பர்கள் அனைவரும் புதிய மேம்படுத்தப்பட்ட கார்டு வாங்க வேண்டும். இந்த புதிய கார்டு பெற தேவையானவை :-

1. ஒவ்வொரு பயனாளிக்கும் இரண்டு பாஸ் போர்ட் சைஸ் போட்டோ வேண்டும்.  (பின் புறத்தில் சிவப்பு நிறம் வேண்டும் ) (WITH RED BACKGROUND) .

2.ஒவ்வொரு கார்டுக்கும் Rs.135/- வங்கி வரைவோலை, அந்தந்த வட்டார அலுவலத்தின் பெயரில் எடுக்க வேண்டும். (In the name of the Regional Centre).

3. பழைய கார்டின் போட்டோ நகல் இணைக்க வேண்டும்.

4. ECHS கார்டை மேம்படுத்த தேவையான விண்ணப்ப படிவம் பாலி கிளினிக்கில் கிடைக்கும்.  தேவையானால் இங்கே கிளிக் செய்தும் பெற்றுக்கொள்ளலாம்.

5. இதுவரை இந்த  திட்டத்தில் சேராதவர்கள், புதியதாக சேர விரும்பினால், உரிய விண்ணப்பத்துடன் கட்டணத்தையும் முறையாக செலுத்தி ரசீது பெற்ற பின், கார்டு  வரும் வரை அந்த ரசீதின் அடிப்படையில் சிகிட்சை பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவிக்க படுகிறது.


Saturday 1 June 2013

இரண்டாவது குடும்ப பென்சன்





இரண்டாவது குடும்ப பென்சன்.

இரண்டாவது குடும்ப பென்சன் வழங்க மத்திய அரசு ஆணைகள் வெளியிட்டு சுமார்  நான்கு  மாதங்கள் ஆகியும் ஒருவர் கூட அதை பெற்றதாக தெரியவில்லை.

ஒரு குடும்ப தலைவர் இறந்தபின் அந்த விதவையின் கோரிக்கைகளை கேட்க யாரும் தயாராக இல்லை.  இறந்து போன ஒரு முன்னாள் படை வீரருடன் பணிபுணிந்த உற்ற நண்பர் கூட இவர்களுக்கு உதவ முன் வருவது இல்லை.  இவர்கள் பணிபுணிந்த அலுவலகங்களில் இந்த விதவைகளின் விண்ணப்பங்களை யாரும் பரிவுடன் பரிசீலிப்பதில்லை.

இரண்டு பென்சன் வாங்கி வந்த என் நண்பர், தன் மரணத்திற்குப்பின் இரண்டு குடும்ப பென்சனும் தன் மனைவிக்கு கிடைக்கவேண்டும் என்பதற்காக பெரும் முயற்சி எடுத்து அரசு ஆணைகளை தன் மனைவி கையில் கொடுத்து இறந்துவிட்டார்.  அவர் இறந்த நாள் 31.01.2012 இன் படி அவர் மனைவிக்கு இரண்டாவது குடும்ப பென்சன் வழங்க எந்த தடையும் இல்லை.  இருந்தும் கடந்த நான்கு மாதங்களாக இரண்டாவது பென்சன் வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  ஏன் என்று தெரியவில்லை.  என்ன செய்வதென்றும் தெரியவில்லை.  கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ என்று இந்த வயதான விதவைகள் தினமும் ஏங்கிக்கொண்டிர்க்கின்றனர். 

மழை நின்ற பின்னும் தூறல் விடவில்லை என்பது போல் அரசாணைகள் வந்த பின்னரும் அனுபவிக்க முடியாமல் தடுக்கிறது அலுவலக நடைமுறைகள்.  இதற்க்கு என்னதான் தீர்வு ?

முன்னாள் இராணுவத்தினர் நல சங்கங்கள் இந்த பிரச்சனைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்பதே எமது வேண்டுகோள். 

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...